The Indian Times

விவாகரத்து கிடைத்ததை PHOTOSHOOT எடுத்துகொண்டாடிய தமிழ் சீரியல் நடிகை

திருமணம்,குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது அல்லது பிறந்த குழந்தையை விதவிதமாக புகைப்படம் எடுத்து கொண்டாடுவது தற்போது வைரலான ஒன்றாக உள்ளது.ஆரம்பத்தில் திருமணத்தில் மட்டும் தான் புகைப்படம் எடுக்கும் வழக்கம் இருந்தது.

தற்போது அந்த நடைமுறை முற்றிலும் மாறி கிடைக்கும் நேரங்களிலெல்லாம் புகைப்படம் எடுத்து கொண்டிருக்கிறோம்.ப்ரீ வெட்டிங்,போஸ்ட் வெட்டிங், பிறந்தநாள் என புகைப்படம் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

Advertisement

இந்நிலையில் பிரபல தமிழ் சீரியல் நடிகை எடுத்த புகைப்படம் ஒன்றும் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முள்ளும் மலரும் என்ற நாடகத்தில் நடித்து பிரபலமாகிய நடிகை ஷாலினி.இவர் தற்போது தனக்கு விவாகரத்து கிடைத்துள்ளதை மகிழ்ச்சியாக போட்டோஷூட் எடுத்து கொண்டாடியுள்ளார்.

ஷாலினி ஏற்கனவே திருமணமாகியவர் ,பின்பு முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெறவே பின்னர் அர்ஜுன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

காதல் திருமணத்தில் முடிந்தது,இருப்பினும் இவர்களுக்கும் இடையே மனக்கசப்பு காரணமாக இருவரும் தற்போது விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர்.

அதனை கொண்டாடும் விதமாக ஷாலினி அர்ஜுனிடம் இருந்து எடுத்த புகைப்படங்களை கிழித்தும்,கையில் மதுவுடனும் புகைப்படம் எடுத்து கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in