The Indian Times

லேடி பாகுபலி.. யானை மீது ஏறி அமர்ந்த ஸ்ருதி | Shruthi Periyasamy

பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் ஸ்ருதி பெரியசாமி. இவர் மாடல் ஆக உள்ளார். இவர் செய்த கருப்பு நிறத்தில் இருப்பவர்களை தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளியே கொண்டு வரும் வகையில் கடவுள்கள் கருப்பு நிறத்தில் இருப்பது போன்று போட்டோஷூட் நடத்தினார். 2019ம் ஆண்டு நடைபெற்ற FBB மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்ட இவர் இறுதி வரை வந்தார் ஆனால் அவரால் வெல்ல முடியவில்லை. 2020ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியிலும் கலந்து கொண்ட இவர் இறுதி வரை வந்தார் ஆனால் அதிலும் வெல்ல முடியவில்லை.

Advertisement

இதன் செல்வாக்கு காரணமாக இவர் பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டார். இதில் இவருக்கும் தாமரைக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்தது. தாமரையின் நாணயத்தை திருடியதால் இவர் மீது அதிருப்தி நிலவியது. அதன் காரணமாக சில நாட்களிலேயே பிக்பாஸ்லிருந்து வெளியேற்றப்பட்டார். பிறகு மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் என்னும் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

Advertisement

தற்போது இவரின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் யானை மீது பாகுபலி ஏறுவது போல ஏறுகிறார். அதை பற்றி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் “நான் அவளுடன் இருந்த சில அந்த மணி நேரம் என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள் ஒண்றாக என்னுமே இருக்கும்” லட்சுமியும் நானும் !! என்று கூறியுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in