FLIGHT-ல காரப்பொறி கேட்டு கலவரம் செய்த நடிகை ஸ்ருதி சண்முக பிரியா

சினிமாவில் நடிக்க வேண்டும் என பலரும் கனவுகளுடன் இருக்கின்றனர்,ஆனால் எல்லாருக்கும் கனவு நினைவாகுகிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.காரணம் முயற்சியின்மை,சிறிது தூரம் மட்டுமே லட்சியத்திற்காக பயணம் செய்துவிட்டு இதற்கு மேல் கிடைக்காது என்று திரும்புபவர்களுக்கு வெற்றி கிடைக்காது,இறுதி வரை போராடனும்,அப்படி போராடியவர் தான் ஸ்ருதி.சினிமாவில் சாதிக்க வேண்டும் என வாய்ப்பு தேட தொடங்கிய ஸ்ருதிக்கு மெட்டி ஒலி புகழ் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பாகிய நாதஸ்வரம் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்தது.கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்த வேண்டும் என இந்த நாடகத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றவர் ஸ்ருதி சண்முக பிரியா.அறிமுகமாகிய முதல் நாடகத்திலேயே தமிழக மக்களிடம் பிரபலமாகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

FLIGHT-ல காரப்பொறி கேட்டு கலவரம் செய்த நடிகை ஸ்ருதி சண்முக பிரியா 1

விளம்பரம்

இந்த நாடகத்தின் வெற்றியை தொடர்ந்து வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா ஆகிய தொடர்களில் நடித்து நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார். எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் தனது கடின உழைப்பினால் வாய்ப்பு தேடி அலைந்து,கிடைத்த சரியான வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு இன்று இந்தளவிற்கு உயர்ந்துள்ளார்.இந்நிலையில் பிரெஞ்சு படிப்பு மேல் தனி கவனம் செலுத்தி படித்து வந்ததால் நாடகங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாடி பில்டர் ஆன அரவிந்த் சேகர் என்பவருடன் நிச்சயம் ஆகி விட்டது என இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார்.அதன்படி அண்மையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

FLIGHT-ல காரப்பொறி கேட்டு கலவரம் செய்த நடிகை ஸ்ருதி சண்முக பிரியா 2

விளம்பரம்

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக பின்தொடருபவர்களை வைத்துள்ளார்,ஸ்ருதி எதை செய்து வீடியோவாக பதிவிட்டாலும் அதனை ரசிக்க இவருக்கு ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது திருமணத்திற்கு பிறகு கணவன் மற்றும் மனைவி விமானத்தில் வெளியூர் சென்றுள்ளனர்.அப்பொழுது அங்கு வைத்து நடிகை ஸ்ருதி செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.அதில் கில்லி படத்தில் நடிகை த்ரிஷா பேசும் காரப்பொறி வேணும் என்ற வசனத்தினை பேசி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. அதிர்ச்சியடைந்த விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment