நடிகை சில்க் ஸ்மிதா 1979ஆம் ஆண்டு மலையாள படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர்,இப்படத்தை தொடர்ந்து மலையாள படத்தில் நடித்து வந்த இவருக்கு 1980 ஆம் ஆண்டு வண்டிச்சக்கரம் என்ற தமிழ் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.
இதனை சரியாக பயன்படுத்தி தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்,தனது கண்களால் ரசிகர்களை மயக்கி தனது வசம் ரசிகர்கள் கூட்டத்தை தமிழ் சினிமாவில் சேர்த்துக்கொண்டார் சில்க்.
இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்து பட்டையை கிளப்பி இருக்கிறார் சில்க்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.
இவர் 1996ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்,இவரின் இழப்பு ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்று சில்க் ஸ்மிதாவின் நினைவு நாள் ,ரசிகர்கள் அவருக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் இவரின் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in