பிரின்ஸ் தோல்வியால் வெளியீட்டாளருக்கு கோடிகள் கொடுத்து நஷ்டத்தை ஈடு செய்த சிவகார்த்திகேயன்…அதுவும் எத்தனை கோடிகள் தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் போட்டியாளராக தனது வாழக்கையை தொடங்கி தற்போது மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.இதற்கு காரணம் அவரது விடா முயற்சியே.தனது கடின உழைப்பால் மட்டுமே அவர் இந்த இடத்தினை அடைந்து பல இளைஞர்களுக்கும் அவர் ஒரு முன் மாதிரியாக விளங்குகிறார்.கையில் மைக்கை பிடித்து பலர் முன் மிமிக்ரி செய்து தனது வாழ்க்கையை தொடங்கியவர்,இவருக்கான வாய்ப்பினை விஜய் தொலைக்காட்சி இவருக்கு வழங்கியது,அதை இறுக்க பிடித்துக்கொண்டு மேலேறினார்.போட்டியாளர்,தொகுப்பாளர்,நடிகர் என படிப்படியாக உயரங்களை தொட்டவர் இவர்.தற்போது இவர் படம் கோடிகளில் வசூல் படைத்து வருகிறது.

பிரின்ஸ் தோல்வியால் வெளியீட்டாளருக்கு கோடிகள் கொடுத்து நஷ்டத்தை ஈடு செய்த சிவகார்த்திகேயன்...அதுவும் எத்தனை கோடிகள் தெரியுமா? 1

விளம்பரம்

இந்நிலையில் அண்மையில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களை பெருமளவு ஏமாற்றம் அடைய செய்தது.கடந்த டாக்டர் மற்றும் டான் ஆகிய சிவகார்த்திகேயன் படங்கள் எல்லாம் பெருமளவு ஹிட் அடித்த நிலையில் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறவில்லை.இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக மண்டேலா பட இயக்குனரின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்

பிரின்ஸ் தோல்வியால் வெளியீட்டாளருக்கு கோடிகள் கொடுத்து நஷ்டத்தை ஈடு செய்த சிவகார்த்திகேயன்...அதுவும் எத்தனை கோடிகள் தெரியுமா? 2

விளம்பரம்

இந்நிலையில் பிரின்ஸ் படத்தின் தோல்வியால் இப்படத்தினை வெளியிட்ட பைனான்சியர் அன்புச்செழியன் பெரும் நஷ்டத்தினை எதிர்கொண்டார்.இதனால் சிவகார்த்திகேயனும்,பிரின்ஸ் தயாரிப்பு நிறுவனமும் சேர்ந்து 6 கோடி ரூபாயை பைனான்சியர் அன்புச்செழியனுக்கு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முன்னதாக ரஜினிகாந்த் இதே போல தனது படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தினை ஈடுகட்ட திருப்பி காசு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் சிவகார்த்திகேயனின் இந்த செயலை ரசிகர்களும் ,சினிமா விநியோகஸ்தர்களும் பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment