The Indian Times

பிரசன்னா வாங்க போட்டோ எடுக்கலாம்.. குடும்பத்துடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த நடிகை சினேகா பிரசன்னா

நடிகை சினேகா மானசி என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் .இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தனது வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில் தமிழ் சினிமா சினேகாவை அழைத்து.அதன்படி என்னவளே படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார்.இந்த படங்களில் வரவேற்புகள் ரசிகர்களிடம் கிடைக்காததால் இப்படத்தினை தொடர்ந்து வரவேற்புக்காக தமிழ் தெலுங்கு படங்களில் மாறி மாறி நடிக்க தொடங்கினார்.அதன்படி 2003 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வசீகரா படத்தில் நடித்தார் இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.இவரது சிரிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து புன்னகை அரசி என்ற பெயரையே மக்களிடம் வாங்கியுள்ளார்.

Advertisement

இந்த வெற்றியை தொடர்ந்து பார்த்திபன் கனவு,வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆட்டோகிராப் ஆனந்தம் என பல வெற்றிப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.இவர் நடித்த ஆனந்தம் படத்தில் இடம்பெற்ற ஒற்றை ருபாய் பாடல் இன்று வரை மக்களின் மனதில் நீங்காமல் உள்ளது.இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் ஈடுபாடு காட்டாமல் கதாநாயகியாக நடிக்காமல் முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

Advertisement

இவர்கள் அடிக்கடி வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இவர்களது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்ட் ஆக்க பட்டு வருகிறது.தற்போது சினேகாவும் பிரசன்னாவும் மகன் மற்றும் மகளுடன் திருப்பதி பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.இந்த புகைப்படங்களை பிரசன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைபடத்தினை ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in