நஷ்டத்திலும் மக்களுக்காக தொடர்ந்து அம்மன் உணவகம் நடத்தும் சூரி

மதுரையை சேர்ந்த சூரி,சினிமாவின் மேல் கொண்ட காதலால் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தார்.வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த அனைவரும் வெற்றிபெறுவதில்லை,யாரிடம் கடின உழைப்பு,விடா முயற்சி உள்ளதோ அவர்கள் மட்டுமே வெற்றிபெற முடியும்.அந்த இரண்டையும் கொண்ட சூரி வெற்றிபெற்றார்.1999 ஆம் ஆண்டு பிரபு தேவா நடிப்பில் வெளியாகிய நினைவிருக்கும் வரை என்ற படத்தில் ஒரு சில நிமிட கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்குள் கால் தடம் பதித்தார்.இவர் தீவிர ரஜினி ரசிகர் என்பதால் அம்மா வைத்த பெயரை மாற்றிக்கொண்டு தளபதி படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் பெயர் ஆன சூர்யா என மாற்றிக்கொண்டார்.அது நாளடைவில் சூரி என மாறியது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா ஹிந்தி பாடலுக்கு ம ர ண குத்து

நஷ்டத்திலும் மக்களுக்காக தொடர்ந்து அம்மன் உணவகம் நடத்தும் சூரி 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து பல படங்களில் கூட்டத்தில் ஒருவனாய் நின்று நடிக்க தொடங்கினார்.சரியான வாய்ப்புக்காக எதிர்பார்த்து காத்திருந்த சூரிக்கு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திய சூரி இப்படத்தில் மாபெரும் வரவேற்பினை பெற்றார்.இதில் இடம் பெட்ரா பரோட்டா காமெடி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது,அன்றுமுதல் சாதா சூரி இப்படத்தில் இருந்து பரோட்டா சூரி என்று மக்களிடம் அறிமுகம் ஆகினார்.தனது கடின முயற்சியினால் தற்போது முன்னணி இடத்திற்கு வந்துள்ளார் நடிகர் சூரி.பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை நடிகராக சூரி நடித்து அசத்தி விட்டார்.தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  VIJAY ANTONY-ன் ROMEO படத்தின் FIRST SINGLE வெளியாகியது

நஷ்டத்திலும் மக்களுக்காக தொடர்ந்து அம்மன் உணவகம் நடத்தும் சூரி 2

விளம்பரம்

இவர் தற்போது அம்மன் உணவகத்தினை மதுரையில் நடத்தி வருகிறார்.அண்மையில் சூரி நடத்தி வரும் உணவகங்களில் ரெய்டு நடைபெற்றது மேலும் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது சூரி தரப்பு ,அதில் கூறியதாவது மதுரை மேலூர் அரசு மருத்துவமனையில் அம்மன் உணவகம் செயல்பட்டு வருகிறது,இந்த உணவகத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கப்படுகிறது.இதனால் சூரிக்கு நாள் தோறும் 25ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது,இருப்பினும் மக்களுக்கு தரமான உணவுகளை வழங்க வேண்டும் என சூரி தனது கைக்காசை போட்டு நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment