The Indian Times

சாக்கடையில் வீசப்பட்ட எலும்புகள்..இந்த சூப் கடைகாரர் செய்த செயலை நீங்களே பாருங்க | Viral Video

இந்தியாவில் காளான், பானிபூரி, பாவ்பாஜி சிக்கன் பகோடா, சூப் போன்ற ஐட்டங்கள் அமோகமாக விற்பனை நடக்கும் ஒரு தொழிலாக உள்ளது. இப்போது பிரச்சினை என்னவென்றால் இங்கு பலர் தரமான பொருட்களை தருவதில்லை. மாவை காலில் போட்டு மிதிப்பது, வியர்வையை மாவில் தெளிப்பது, பயன்படுத்திய எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி உண்ண வரும் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தைப் பற்றி துளியும் கவலைப்படாமல் கடை நடத்துபவர்கள் நடந்து கொள்வர். தரமற்ற உணவுப் பொருட்களையும், கலப்படம் கலந்த உணவுப் பொருட்களையும் உண்டு இறந்தவர்கள் நம் நாட்டில் பலபேர் உண்டு.

Advertisement

அதேபோல் தற்போது ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் சென்னை OMR சாலையில் தள்ளுவண்டி கடையில் ஒரு முதியவர் சூப் கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் நடக்கும் ஒரு காட்சியை சிசிடிவி படம் பிடித்துள்ளது. அதை பார்க்கும் போது இனி ரோட்டு கடைகளில் இனி சாப்பிடவே கூடாது என்று எண்ணத் தோன்றுகிறது. அதில் கடைக்கு வந்து சாப்பிடும் சிலர் சூப்பை குடித்துவிட்டு எலும்புத் துண்டுகளை கீழே போடுகின்றனர். Youtube Video Code Embed Credits: SSK TV

Advertisement

சிறுது நேரம் சுற்றும் முற்றும் பார்க்கும் அந்த பெரியவர் யாரும் இல்லாத நேரத்தில் அந்த எலும்புத்துண்டுகளை பொறுக்கி எடுத்துவைத்துக் கொள்கிறார். பின்னர் தண்ணீரில் கழுவி மீண்டும் அடுப்பில் சூப் இருக்கும் பாத்திரத்தில் போட்டு விடுகிறார். இவர் இதே பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக கடை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண…Watch the below Video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in