பிரபல பாடகர் SP பாலசுப்ரமணியன் மகன் SPB சரணின் பரிதாபநிலை..இவருக்கா இப்படி ஒரு நிலை

இசையின் மூச்சு என்று அழைக்கப்படும் மறைந்த SP பாலசுப்ரமணியம் அவர்களின் மகன் SPB சரண். தந்தையை போல இவரும் சினிமாவில் பல பாடல்களை பாடி வருகிறார்.மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.இவர் அலைபாயுதே படத்தில் பாடிய நகிலா நகிலா என்ற பாடல் இன்றுவரை பலருக்கும் பிடித்தமானதாக அமைந்துள்ளது.இவர் பாடகர்,நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் கூட சமுத்திரக்கனி இயக்கிய உன்னை சரணடைந்தேன் என்ற படத்தினை முதல் முறையாக தயாரித்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார்.மேலும் இப்படத்தில் நடித்து நடிகராகவும் அறிமுகம் ஆகினார் SPB சரண்.

கட்டாயம் படிக்கவும்  சரவணனுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம்.. ஏமாற்றிய பெண் வீட்டார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

பிரபல பாடகர் SP பாலசுப்ரமணியன் மகன் SPB சரணின் பரிதாபநிலை..இவருக்கா இப்படி ஒரு நிலை 1

விளம்பரம்

SP பாலசுப்ரமணியம் இசைக்கு அரசன்.இவரது குரலை கேட்டால் போதும் எவ்வளவு பெரிய துன்பங்கள் இருந்தாலும் அது நம்மை விட்டு பறந்துவிடும் அந்தளவிற்கு ஒரு அற்புதமான பாடகர்.இவர் கடந்த சில ஆண்டுக்கு முன்னர் மறைந்துவிட்டார்.அதனை கூட மனம் ஏற்க மறுக்கிறது அவரது பாடல்களை கேட்கும் பொழுது.இவரை போலவே இவர் மகன் சினிமாவில் கொடிகட்டி பறப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர் . SPB சரண் திரைக்கு அறிமுகமாகி 25 வருடங்கள் ஆகிவிட்டது.சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.தமிழ்,தெலுங்கு என பல மொழிகளிலும் பல பாடல்கள் பாடியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  KPY தீனா திருமண வரவேற்பு புகைப்படங்கள்

பிரபல பாடகர் SP பாலசுப்ரமணியன் மகன் SPB சரணின் பரிதாபநிலை..இவருக்கா இப்படி ஒரு நிலை 2

விளம்பரம்

தற்போது இவர் பாடல் வாய்ப்புகள் சரியாக வருவதில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது,மக்கள் மெலோடி பாட்டுக்களை மட்டுமே கேட்கின்றனர்.ஸ்பீடு பாட்டுக்களை சினி மா வெளியாகும் பொழுது கேட்டுக்கொண்டு மறந்துவிடுகின்றனர் நான் பல இசையமைப்பாளரின் இசையில் பாடி இருக்கிறேன்,அப்பொழுது எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது.இப்பொழுது வாய்ப்புகள் வருவது குறைவாகிவிட்டது ,அது ஏன் என தெரியவில்லை என்னால் பாட முடியாது என்று நான் கூறியதுமில்லை,கூப்பிட்ட உடன் ரெக்கார்டிங் சென்றுவிடுவேன் .இருப்பினும் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை ஏன் என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாக தெரிவித்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் அப்பாவை போலவே இவருக்கும் அதே குரல் உண்டு,இவருக்கு வாய்ப்புகள் இல்லை என்பது மிகவும் கஷ்டமான ஒன்று,இவருக்கா இப்படி ஒரு நிலைமை என ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment