The Indian Times

13 வருட தொகுப்பாளினி வேலை..அப்பாவை நினைத்து கண்கலங்கிய பிரியங்கா..நெகிழ்ச்சி தருணங்கள் | Priyanga Deshpande

விஜய் டிவியில் தவிர்க்க முடியாத ஒரு பெயர் என்றால் அது பிரியங்கா தான். 13 ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கிய அவருக்கு யூடியூப் சேனல் ஒன்று விருது வழங்கி அவரை கௌரவித்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியை மா.கா.பா. ஆனந்துடன் இணைந்து பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார். சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி இவ்வளவு வெற்றிகரமாக செல்வதற்கு ப்ரியங்காவின் காமெடிகளும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

Advertisement

மக்கள் மத்தியில் செல்வாக்கான இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெரும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 5-ன் இறுதி போட்டியாளர்களுள் ஒருவர் மற்றும் இந்த சீசனில் இவர் இரண்டாவது இடத்தை பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இவர் ப்ரியங்கா தேஷ்பாண்டே என்னும் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் செய்யும் காமெடி குறும்பு வீடியோக்களை அதில் பதிவேற்றி வருகிறார். சமீபத்தில் பாவனியின் சொந்த ஊரான ஹைதராபாத்துக்கு அபிஷேக், மது, ப்ரியங்கா ஆகியோர் சென்று லூட்டி அடித்தனர். அந்த வீடீயோக்கள் வைரலானது. Youtube Video Code Embed Credits: Galatta

Advertisement

இவர் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி 13 ஆண்டுகள் ஓடி விட்டது. அதற்காக அவருக்கு கலாட்டா youtube சேனல் சார்பாக ஐகானிக் வுமன் விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருதை பெரும் போது அவர் மிகவும் கலங்கி பேசினார். பிக்பாஸ்க்கு பிறகு மோசமான கமெண்ட்கள் வருவதாகவும், hurt பண்ணாதவாறு கமெண்ட் பண்ணுங்கள் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். பல தடைகளை தாண்டி இந்த இடத்தில் இருப்பதாகவும், 13 வருடங்களாக தினமும் டிவியில் இந்த முகத்தை மக்கள் பார்த்துள்ளார்கள் அதற்காக பெருமை படுவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்..அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in