தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா,உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.
அந்தளவிற்கு தனது நடிப்பினால் மக்களை கவர்ந்துள்ளார் ரஜினி.பிறரை தட்டிக்கொடுத்து முன்னேற்றுவதில் இவரை போல சினிமாவில் யாரும் கிடையாது.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர்.
அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல
இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.
ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை திருவிழா போல அண்மையில் கொண்டாடினர். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் படத்தில் கடுமையாக உழைத்து இருக்கிறார் ரஜினிகாந்த் , நேற்று முன்தினம் வெளியாகிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது
தற்போது சூப்பர் ஸ்டார் தான் நடத்துனராக பணியாற்றிய பெங்களூர் போக்குவரத்துக்கு கழகத்திற்கு சென்று நண்பர்களை சந்தித்து அங்குள்ள பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in