இயக்குனரிடம் அடி வாங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ரஜினிகாந்த் .இவருக்கு சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. காரணம் இந்திய சினிமாவிற்கே இவர் சூப்பர் ஸ்டார் என்பதால்.இவர் பேச்சு,நடிப்பு,ஸ்டைல் என எல்லாவற்றையும் பிரித்து ரசித்து பார்க்கும் அளவிற்கு தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை கூட்டியுள்ளார்.இவர் படங்கள் வெளிநாடுகளிலும் வெளியாவதால் வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உண்டு.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  100 நரிக்குறவர்களை திரையரங்கு அழைத்து சென்று படம் பார்க்க வைத்த விஜயகாந்த்

இயக்குனரிடம் அடி வாங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1

விளம்பரம்

என்னதான் தற்போது மிக பெரிய நடிகர்களாக இருந்தாலும் ஆரம்பத்தில் பல அடிகள்,அவமானங்கள் ஆகியவைகளை பெற்றுத்தான் இன்று சினிமாவில் உயர்ந்துள்ளார்.அந்த வரிசையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பல அவமானங்களை ஆரம்பத்தில் சந்தித்துள்ளார் மேலும் ஒருபடி மேலே சென்று இயக்குனரிடம் அடியும் வாங்கியுள்ளார்.அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மானசீக குரு ஆன பாலச்சந்தரிடம் தான் அடி வாங்கியுள்ளார்.ரஜினியை சினிமாவில் அறிமுக படுத்தியது பாலச்சந்தர் தான்,ரஜினியிடம் ஏதோ ஒரு திறமை இருப்பதை உணர்ந்த பாலா சந்தர் ரஜினியை இந்த அளவு உருவாக்கியுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா திருமண புகைப்படங்கள்

இயக்குனரிடம் அடி வாங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2

விளம்பரம்

மூன்று முடிச்சு படத்தில் தயாரிப்பாளர்கள் முதலில் கமலை நடிக்க வைக்க தான் அறிவுறுத்தி உள்ளார்கள்.ஆனால் பாலா சந்தர் ரஜினியை நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளார்.இதற்கு தயாரிப்பாளர்கள் ரஜினியை அதிகம் விமர்சனம் செய்துள்ளனர்,இருந்தாலும் பாலச்சந்தர் ரஜினி தான் கட்டாயம் நடிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.மேலும் என் முடிவு தப்பாகினால் நான் சினிமாவை விட்டே சென்றுவிடுகிறேன் என கூறி ரஜினியை வைத்து படம் இயக்கியுள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் சரியாக நடிக்கவில்லை என்றால் பயங்கரமாக பாலச்சந்தர் திட்டுவாராம் மேலும் அடிக்கவும் கூட செய்வார் என நிகழ்ச்சி ஒன்றில் ரஜினியே கூறியிருப்பார்.ஆசானிடம் அடி வாங்கியதால் தான் ரஜினி இன்று இவ்வளவு உயரம் அடைந்துள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment