நடிகர் சிவகுமாரின் மகன்தான் சூர்யா.அப்பாவின் மூலம் சினிமாவுக்குள் எளிதாக வந்தாலும் தனது கடின உழைப்பை இன்று வரை அவர் விட்டதே இல்லை என்றுதான் கூற வேண்டும்.அந்தளவிற்கு பல படங்களில் உடலை வருத்தி மெனக்கெடல்களை எடுத்துள்ளார் சூர்யா.இவர் பல படங்களில் நடித்தாலும் இவருக்கு சினிமாவில் திருப்பு முனையை ஏற்படுத்திய படம் என்று கூறினால் அது இயக்குனர் பாலா இயக்கிய நந்தா தான் இப்படத்திற்கு பிறகு தான் இவரின் திறமை உலகிற்கு தெரிந்து இவருக்கான ரசிகர்கள் கூட்டம் உருவாகியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் 10 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் 3டியில் இப்படம் வெளியாக உள்ளது.தேவி ஸ்ரீபிரசாத் இசையில்,ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க உள்ளது.மிகப்பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது.இதனால் படம் எப்படி இருக்கும் என காண இப்படத்திற்கு இவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் பெயரை தற்போது படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.இப்படத்திற்கு கங்குவா என பெயரிடப்பட்டுள்ளது.இப்படம் உலகம் முழுவதும் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படம் வெற்றிபெற ரசிகர்கள் தங்களது கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Embed video credits : SAREGAMA TAMIL
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in