The Indian Times

“எனக்கு வருத்தமா இருக்கு!” – பிக் பாஸிலிருந்து வெளியேறிய பின் மனமுடைந்து பேசிய சுருதி! Suruthi Periyasamy After Bigg Boss

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களுள் ஒருவர் தான் சுருதி பெரியசாமி! இவர் சேலம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து பின்பு கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி அதில் பெயர் சொல்லும் அளவிற்கு பாராட்டு பெற்று பின்பு சென்னைக்கு வந்து வேலை செய்து பின்பு சாதிக்க எண்ணி மாடலிங் துறைக்குள் நுழைந்து அதனால் புகழின் உச்சத்தை தொட்டவர் என்பது இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதற்கு பிறகே அனைவரும் அறிந்த செய்தியாக மாறியது! தனக்கான அங்கீகாரத்தை எண்ணி பிக் பாஸ் வீட்டிற்கும் நுழைந்த இவர், போட்டியில் அனைவர்க்கும் சவாலாக விளங்கியவர் என்பதும் அனைவரும் அறிந்ததே!

Advertisement

ஆனால், எல்லாருக்கும் அவ்வப்போது தொல்லையாக கருதப்படும் தாமரையே இவர் வெளியேற முக்கிய காரணமாக விளங்கினார் என்பதும் நமக்கு தெரிந்த விஷயம் தான்! விளையாட சொன்னால் அடுத்தவர் அனுதாபத்தில் மட்டுமே அண்டி பிழைப்பவராக தாமரைச்செல்வி ரசிகர்கள் முன்பு பார்க்கப்படுகிறார்! ஏனென்றால் வீட்டையே ஆட்டி படைக்கும் ஒரு நாணயம் தனக்கு முக்கியம் என்பதை விட தாமரைக்கு முக்கியம் என அனுதாப வாக்குகள் வாங்க ஒட்டுமொத்த வீடும் விளையாடாமல் விக்ரமன் படம் போல மாறி ரசிகர்களை கடுப்பேத்தியது!

Advertisement

அது மட்டும் இல்லாமல் அந்த நாணயத்தை தாமரை துணி மாற்றும் நேரத்தில் சுருதி எடுத்து தனக்கு உரிமையாக்கி கொண்டதே இவர் மக்களின் வாக்குகளை குறைவாக பெற காரணம்! ஆனாலும், தாமரை இன்னும் திருந்தாமல் புறணி பேசி அண்டி பிழைக்கும் செயலை தொடங்கி விட்டார்! பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சுருதி முதல்முறையாக மனம்திறந்து பேசி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்! அந்த வீடியோவை நீங்களும் காணுங்கள்! Watch The Video Below….

https://www.youtube.com/watch?v=ghhXM6aWc4s

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in