சூர்யா பாலா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு இந்த பெயரா….வித்தியாசமா இருக்கே

நடிகர் சூர்யா நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் .இப்படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து பல படங்களில் தொடர்ச்சியாக சூர்யா நடித்து வந்தார்.இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவருக்கு நடிகர் என்ற அந்தஸ்து கிடைத்ததே தவிர முக்கிய நடிகர் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை.அதற்காக போராடிக்கொண்டிருக்கும் பொழுதுதான் இயக்குனர் பாலாவின் நந்தா படத்தில் வாய்ப்பு கிடைத்தது.தனது நடிப்பு திறமையை மொத்தமாக காண்பித்த நடிகர் சூர்யாவிற்கு இப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல் ஆக அமைந்தது.இந்த படத்தின் மூலம் சூர்யா முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி பிரியாவுடன் ரொமென்ஸ் செய்யும் இயக்குனர் அட்லீ

சூர்யா பாலா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு இந்த பெயரா....வித்தியாசமா இருக்கே 1

விளம்பரம்

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார்.இப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகி விட்டார்.பாலாவுக்கு சூர்யாவிற்கும் பிரச்சனை இனி இந்த படம் உருவாகாது என பல வதந்திகள் பரவியது.இந்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் சூர்யா இயக்குனர் பாலா உடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு மீண்டும் படப்பிடிப்புக்கு செல்ல காத்திருப்பதாக கூறி அனைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

கட்டாயம் படிக்கவும்  சித்தி 2 சீரியல் நடிகைக்கு திருமணமா? வைரலாகும் புகைப்படங்கள்

சூர்யா பாலா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு இந்த பெயரா....வித்தியாசமா இருக்கே 2

விளம்பரம்

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட ஷூட்டிங் விரைவில் மதுரையில் தொடங்க இருக்கிறது. தற்போது இப்படத்தின் பெயர் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதன்படி வணங்கான் அல்லது கடலாடி என படத்திற்கு பெயர் சூட்ட பாலா யோசித்து இருக்கிறாராம்.தனது படத்திற்கு எப்பொழுதும் வித்தியாசமாக பெயர் வைக்கும் பாலா இந்த படத்திற்கு என்ன பெயர் வைத்துள்ளார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment