தயாராகிய கோபி சீரியல்..ஆனால் இந்தமுறை சன்டிவியில் ஒளிபரப்பு இல்லையா? சோகத்தில் இல்லத்தரசிகள்

1999 ஆம் ஆண்டு சன் டிவியில் அக்ஷயா என்ற நாடகத்தினை இயக்கி சின்னத்திரையில் இயக்குனர் ஆக களம் இறங்கினார்.பல சீரியல்களை இயக்கியும் இவருக்கான வரவேற்பு எதிலும் கிடைக்கவில்லை.இறுதியாக 2002 ஆம் ஆண்டு மெட்டி ஒலி என்ற குடும்ப சீரியலை இயக்கினார்,இந்த சீரியலை சன் டிவி ஒளிபரப்பு செய்தது.இந்த சீரியல் மாபெரும் ஹிட் அடித்தது.இவரை தற்போது வரை அனைவரும் கோபி என்றுதான் அழைத்து வருகிறார்கள்.அந்த அளவிற்கு கோபி என்கிற கதாபாத்திரத்தில் ஒன்றிவிட்டார் திருமுருகன்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

தயாராகிய கோபி சீரியல்..ஆனால் இந்தமுறை சன்டிவியில் ஒளிபரப்பு இல்லையா? சோகத்தில் இல்லத்தரசிகள் 1

விளம்பரம்

இவர் சின்னத்திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளித்திரையில் நடிகர் பரத் வைத்து எம்டன் மகன் மற்றும் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தினையும் இயக்கின் வெள்ளித்திரையில் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.இதில் எம்டன் மகன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடதக்கது.இதனை தொடர்ந்து பல வெற்றிகரமான சீரியல் தொடர்களை அளிக்க தொடங்கி மக்களின் வரவேற்பினை பெற்றார்.இவருக்கென பெரும் குடும்ப தலைவிகளின் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியை அடித்த குமரவேல்.. சண்டைக்கு சென்ற கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

தயாராகிய கோபி சீரியல்..ஆனால் இந்தமுறை சன்டிவியில் ஒளிபரப்பு இல்லையா? சோகத்தில் இல்லத்தரசிகள் 2

விளம்பரம்

இவர் இயக்கிய நாதஸ்வரம்,குலதெய்வம் மற்றும் கல்யாண வீடு சீரியல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.கல்யாண வீடு சீரியலுக்கு பிறகு ஓய்வெடுத்த கோபி தற்போது மீண்டும் புதிய சீரியலை இயக்கி வருகிறார்.இந்நிலையில் இவரது இந்த சீரியல் குறித்து சில தகவல்கள் வெளியாகியது,அது என்னவென்றால் இத்தனை நாள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய இவர்களது சீரியல் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியது.ஆனால் இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் திருமுருகனிடம் இருந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,விரைவில் எந்த சேனல் என்பதை அவரே அறிவிப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment