தமிழ் சினிமா பல கலைஞர்களை இழந்து தவித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே சினிமா உலகில் இழப்பு என்பது அதிகமாகவே இருந்து வருகிறது,பல நடிகர்கள் நம்மை விட்டு மறைந்து வருவது மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது.
சின்ன கலைவாணர் என பெயரெடுத்த நகைச்சுவையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய விவேக் மறைவு ஆனது ஈடு செய்ய முடியாத ஒன்றாக உள்ளது,இது தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு என்றே கூறலாம்
அடுத்ததாக மிமிக்ரியில் அசத்தும் மயில்சாமி,யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் திடீர் மறைவு பெரும் சொத்தினை ஏற்படுத்தியுள்ளது.அவரை தொடர்ந்து இயக்குனரும் நடிகருமான டிபி கஜேந்திரன் மறைந்தார்.
மேலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் மனோபாலா மறைந்தார்,இவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியாத இறப்பு தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது
மக்களை நகைச்சுவையால் நடிப்பினால் மகிழ்வித்த கலைஞர்கள் மறைவது சொல்ல முடியாத சோகத்தினை ஏற்படுத்துகிறது
தற்போது மறைந்த நடிகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை தென்னிந்திய நடிகர் சங்கம் ஏற்படுத்தி இருந்தது,
இதில் நடிகர் கார்த்தி ,தேவயானி போன்ற நடிகர்கள் கலந்துகொண்டு தங்களது அஞ்சலியை அவர்களுக்கு செலுத்தினர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in