The Indian Times

அம்மா ரொம்ப பாவம்..அவரை நினைத்து தேம்பி தேம்பி அழுதுள்ளேன்..வனிதா மகள் கொடுத்த பேட்டி..| Vanitha Vijayakumar

சில பல சர்ச்சைகளில் சிக்கி சோசியல் மீடியாவில் இன்றும் சர்ச்சையை கிளப்பும் நடிகையாக இருந்து வருகிறார் முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் நடிகை வனிதா விஜயகுமார். சினிமா பின்னணி இருப்பதால் இவர் எளிதாக சினிமாவிற்குள் நுழைந்து விட்டார். தமிழ் சினிமாவில் இவரது முதல் படம் சந்திரலேகா. முதல் படமே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து அடுத்தடுத்து சில படங்களில் மட்டும் நடித்தார் வனிதா. இதுவரை இவருக்கு 3 திருமணங்கள் நடந்திருக்கிறது.

Advertisement

சினிமாவில் பெரியளவில் வராத வனிதா அடுத்து சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். விஜய் டிவியின் புகழ்பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்டார். அதன் பிறகு , கலக்கப்போவது யாரு , குக்கு வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அது போக சமீபகாலமாக பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி வந்த வனிதா , அங்கு நடுவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட காரணத்தினால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உள்ளார். Youtube Video Embed Code Credits: AvalGlitz

Advertisement

இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உண்டு. மகன் தாத்தா விஜயகுமாரின் பராமரிப்பில் வளர்கிறார். இவர் பிக்பாஸ் சென்றுள்ள காரணத்தினால் வனிதாவின் உறவினர்கள் பாதுகாப்பில் தனது இரு மகள்களையும் விட்டு சென்றுள்ளார். தற்போது மூத்த மகள் ஜோவிகா தனியார் youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அவ்வாறு இன்று நடந்த ஒரு பேட்டியில் ஜோவிகா தனது தாயாரை பற்றி கூறியுள்ளார்.அதில் என் தாயாரை நினைத்து நான் தேம்பி தேம்பி அழுதுள்ளேன் என்று கூறினார். மேலும் தனது தாயாரை மற்றவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in