ராதிகாவை நான் ஏன் அம்மான்னு கூப்பிடனும்..அவர் எனக்கு அம்மா இல்லையே.. வரலட்சுமி சரத்குமார் பரபரப்பு பேட்டி

பிரபல நடிகர் சரத்குமார் அவர்களின் முதல் மனைவிக்கு பிறந்தவர் தான் நடிகை வரலட்சுமி .முதல் மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சரத்குமார் அவரை விவாகரத்து செய்தார். பின்னர் நடிகை ராதிகாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.இவரது மகள் வரலட்சுமி தற்போது சினிமா உலகை கலக்கி வரும் நடிகையாக வலம் வருகிறார்.போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் வரலட்சுமி.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இருப்பினும் சினிமா ரசிகர்களிடம் இவர் சென்றடையவில்லை.பின்னர் இயக்குனர் பாலா இயக்கத்தில் தரை தப்பட்டை படத்தில் நடித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தினையும் பெற்று அசத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்

ராதிகாவை நான் ஏன் அம்மான்னு கூப்பிடனும்..அவர் எனக்கு அம்மா இல்லையே.. வரலட்சுமி சரத்குமார் பரபரப்பு பேட்டி 1

விளம்பரம்

தமிழ் மொழி மட்டுமில்லாமல் கன்னடம்,மலையாளம்,தெலுங்கு என பல மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார்.இவர் அறிமுக படத்திற்கே சிறந்த அறிமுக நடிகை என 2 விருதுகளை பெற்றுள்ளார்.கதாநாயகி வேடமாக இருந்தாலும் சரி,வில்லி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி கதாநாயகர்களுக்கு சரிசமமாக அடித்து நொறுக்கி வருகிறார்.இவர் சமந்தா நடிப்பில் வெளிவர இருக்கும் யசோதா படத்தில் நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் வரலட்சுமி.தந்தையை எதிர்பார்க்காமல் தனது கடின உழைப்பால் இத்தகைய இடத்தினை அடைந்துள்ளார் என்றால் மிகையாகாது.மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  பொன்னியின் செல்வன் பூங்குழலியின் செம்ம மாடர்ன் புகைப்படங்கள்

ராதிகாவை நான் ஏன் அம்மான்னு கூப்பிடனும்..அவர் எனக்கு அம்மா இல்லையே.. வரலட்சுமி சரத்குமார் பரபரப்பு பேட்டி 2

விளம்பரம்

இவர் சில மாதங்களுக்கு முன்னாள் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் அவர் நான் ஏன் ராதிகாவை அம்மா என கூப்பிடனும்,அவர் எனது அப்பாவின் இரண்டாவது மனைவி அவ்வளவுதான்.அவருடன் நடிப்பதில் எனக்கு மகிழ்ச்சி எல்லாருக்கும் ஒரே அம்மாதான் இருக்க முடியும் எனக்கும் அப்படித்தான்.நான் ராதிகா அவர்களை ஆண்டி என்று தான் அழைப்பேன் இருவரையும் சமமாக தான் மதிக்கிறேன் என தனது பேட்டியில் தெரிவித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment