வெறித்தனமாக வசூல் வேட்டையை நடத்தும் விடுதலை… ஒரே நாளில் மட்டும் இவ்வளவு கோடிகளா?

மதுரையை சேர்ந்த சூரி,சினிமாவின் மேல் கொண்ட காதலால் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தார்.வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த அனைவரும் வெற்றிபெறுவதில்லை,யாரிடம் கடின உழைப்பு,விடா முயற்சி உள்ளதோ அவர்கள் மட்டுமே வெற்றிபெற முடியும்.அந்த இரண்டையும் கொண்ட சூரி வெற்றிபெற்றார்.1999 ஆம் ஆண்டு பிரபு தேவா நடிப்பில் வெளியாகிய நினைவிருக்கும் வரை என்ற படத்தில் ஒரு சில நிமிட கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்குள் கால் தடம் பதித்தார்.

கட்டாயம் படிக்கவும்  நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள்

வெறித்தனமாக வசூல் வேட்டையை நடத்தும் விடுதலை... ஒரே நாளில் மட்டும் இவ்வளவு கோடிகளா? 1

விளம்பரம்

காமெடியனாக மட்டும் நடித்து வந்த இவர் தற்போது கதாநாயகன் அவதாரம் எடுத்துள்ளார்.இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் விடுதலை பாகம் 1.இப்படத்தில் கதாநாயகனாக சூரி நடித்துள்ளார்.கதாநாயகியாக பவானி ஸ்ரீ நடித்துள்ளார்.விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இளையராஜா இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் கவுதம் மேனன்,சேத்தன் என பல நடிகர்களும் நடித்துள்ளனர்.இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இப்படம் தற்போது முதல் பாகம் மட்டும் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தெலுங்கு வருடப்பிறப்பை வீட்டில் கொண்டாடிய BIGGBOSS சுஜா வருணே

வெறித்தனமாக வசூல் வேட்டையை நடத்தும் விடுதலை... ஒரே நாளில் மட்டும் இவ்வளவு கோடிகளா? 2

விளம்பரம்

இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் வெற்றிமாறனை பாராட்டி வருகின்றனர்.அந்தளவுக்கு தனது நடிப்பினால் சூரியும் விஜய் சேதுபதியும் அனைவரையும் கவர்ந்துள்ளார்கள்.இப்படம் நேற்று ஒரு நாள் மட்டும் உலகம் முழுவதும் ரூ.6.5 கோடி வசூல் செய்துள்ளதாம்,மேலும் வரும் விடுமுறை நாட்களில் இப்படம் இன்னும் அதிகமாக வசூல் பெரும் என பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.அசுரனுக்கு பிறகு காலம் தாழ்த்தினாலும் சிறப்பான படத்தினை தான் கொடுத்துள்ளார் என ரசிகர்களும் தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment