சினிமா உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஆனது சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது..பாலிவுட் முதல் கோலிவுட் வரை என அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர்.நானும் ரவுடி தான் படத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாராவை கதாநாயகியாக வைத்து இயக்கிய நிலையில்,இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு ஆனது நாளடைவில் காதலாக மாறியது.இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகத்தினை வலம் வந்தனர்.இவர்களது திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது என கூறி விக்னேஷ் சிவன் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கல்யாணம் ஜூன் 9 ஆம் தேதி நடப்பதினை உறுதி செய்தார்.இந்த செய்தியை கேட்ட இவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்,
அதன்படி கடந்த 9 ஆம் தேதி இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.ஏராளமான திரைபிரபலங்கள் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுத்து மணமக்களை ஆசிர்வதித்துள்ளார். திருமண வீடியோ முழுவதும் நெட்பிளிக்ஸ் தலத்தில் வெளியாக இருப்பதால் பத்திரிகையாளர்கள் யாரும் திருமணத்தில் அனுமதிக்கப்படவில்லை மேலும் கலந்துகொள்பவர்கள் செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது.இவர்களது திருமணத்தில் பாதுகாப்பிற்காக 80 பவுன்சர்கள் மற்றும் போலீஸ்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.மேலும் பத்திரிகைகளில் உள்ள கியூ ஆர் கோடுகள் மூலம் தான் அனைவரையும் உள்ளே அனுமதித்தனர்.
திருமணம் முடிந்து முதல் முதலாக நடிகை நயன்தாராவும்,விக்னேஷ் சிவனும் இன்று சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்,இந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகை நயன்தாரா மஞ்சள் நிற புடவையுடன் ,நெற்றியில் குங்குமம் வைத்து புது பொலிவுடன் வந்துள்ளார்.இதுவரை இவரது முகத்தில் இந்த பொலிவினை பார்த்தது இல்லை,தற்போது அழகையும் தாண்டி நயன்தாராவிடம் புது பொலிவு காணப்பட்டது.இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அனைவரது கேள்விகளுக்கும் பதில் அளித்தார் நயன்தாரா.அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.இந்நிலையில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் பொழுது பத்திரிகையாளர் ஒருவர் ,மேடம் ஹனிமூனுக்கு எங்க போறீங்க என கேட்டுள்ளார்,அதற்கு வெட்கப்பட்டு நயன்தாரா விக்னேஷ் முகத்தினை பார்த்து சிரித்துள்ளார்.இதுகுறித்து அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in