செல்லம் கை புடிச்சுக்கோமா…திருமணம் முடிந்து முதல் முறையாக திருப்பதி வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன்

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காதல் உலகம் அறிந்தது.இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.இப்படத்தில் இவர்களுக்குள் இடையே ஏற்பட்ட நட்பு ஆனது காதலாக மாறியது.இருவரும் காதல் பறவைகளாக வலம் வந்து கொண்டிருந்தனர்.மேலும் இருவரும் இணைந்து சொந்தமாக ரவுடி பிக்சர் எனும் தயாரிப்பு நிறுவனமும் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்து வருகின்றனர்.அண்மையில் இவர் இயக்கி தயாரித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது.மேலும் உலகம் முழுவதும் 66 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

செல்லம் கை புடிச்சுக்கோமா...திருமணம் முடிந்து முதல் முறையாக திருப்பதி வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் 1

விளம்பரம்

விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் அடிக்கடி கோவில் மற்றும் சுற்றுலா சென்று புகைப்படங்களை ரசிகர்களின் பார்வைக்காக பதிவேற்றி வருவார்..இவர்கள் பதிவேற்றும் புகைப்படங்கள் அனைத்தும் அன்று இணையத்தில் பெருமளவு வைரலாகும் விஷயம் ஆகும்.அந்த அளவிற்கு இவர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.எப்பொழுது இவர்கள் திருமணம் செய்துகொள்ளுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது திருமணம் ஜூன் 9 என அதிகாரபூர்வமாக அறிவித்து நேற்று காதலி நயன்தாராவை திருமணமும் செய்துகொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ தொடங்கினர்.பல சினிமா நட்சத்திரங்கள் நயன்தாரா திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக்கொடுத்து மணமக்களை வாழ்த்தி உள்ளார்.இந்த திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  இதுவரை பார்த்திராத சிறகடிக்க ஆசை சீரியல் மீனா மாடர்ன் உடை புகைப்படங்கள்

செல்லம் கை புடிச்சுக்கோமா...திருமணம் முடிந்து முதல் முறையாக திருப்பதி வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் 2

விளம்பரம்

நேற்று விக்னேஷ் சிவன் தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தன் காதலியை கரம்பிடித்ததாக நெகிழ்ந்து பதிவிட்டு இருந்தார்.திருமணத்திற்கு முன்னர் நடிகை நயன்தாராவும்,விக்னேஷிவனும் அடிக்கடி திருப்பதி கோவிலுக்கு செல்வது வழக்கம்.தற்போது திருமணம் முடிந்து இன்று முதல் நாளே இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இன்று இணையத்தளத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து ,புகைப்படத்தினை இணையத்தில் ஷேர் செய்து வைரலாகி வருகின்றனர்.இவர்களது திருமணத்தினை இயக்குனர் கவுதம் மேனன் இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது.இந்த திருமண வீடியோ விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார்

செல்லம் கை புடிச்சுக்கோமா...திருமணம் முடிந்து முதல் முறையாக திருப்பதி வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment