நானும் அவளுடன் செத்து விட்டேன் – மகள் இறந்தது குறித்து உருக்கமாக பேசிய விஜய் ஆண்டனி

இசையமைப்பாளராக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்து பயணத்தினை தொடங்கியவர் விஜய் ஆண்டனி.இவர் 2005 ஆம் ஆண்டு சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெருமளவு ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை இறக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.இவரது இசைக்கெனெ பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஆரம்ப கட்டத்தில் இசை கருவிகளை வாங்குவதற்கு காசில்லாததால் பல இசைகளை வாயிலேயே இசைத்து அந்த பாடலும் பெருமளவு ஹிட் அடித்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  SUNDARI சீரியல் நாயகி கேபிரியலின் தாறுமாறான Modern புகைப்படங்கள்

நானும் அவளுடன் செத்து விட்டேன் - மகள் இறந்தது குறித்து உருக்கமாக பேசிய விஜய் ஆண்டனி 1

விளம்பரம்

இசை ஒருபக்கம் இருக்க நடிப்பினை கையிலெடுத்தார் விஜய் ஆண்டனி.இவர் 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கினார்.இப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் ஆண்டனி.பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார் விஜய் ஆண்டனி.தற்போது இவர் நடிப்பில் அக்னி சிறகுகள் மற்றும் ரத்தம் என அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் CWC மணிமேகலை ரம்ஜான் கொண்டாட்டம்

நானும் அவளுடன் செத்து விட்டேன் - மகள் இறந்தது குறித்து உருக்கமாக பேசிய விஜய் ஆண்டனி 2

விளம்பரம்

விஜய் ஆண்டனி மகள் மீரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்,இந்த செய்தி அனைவர்க்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,இவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.தற்போது மகள் இறந்தது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்,அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது,என் மகள் மிகவும் தைரியமானவள்,அவர் இப்போ உலகை விட சிறந்த இடத்திற்கு சென்றுள்ளார்,என்னிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறார், அவளுடன் நானும் இறந்து விட்டேன், அவளுக்காக நேரம் செலவிட இருக்கிறேன்,அவள் பெயரில் நான் செய்ய இருக்கும் நல்ல காரியங்களை அவர் தொடங்கி வைப்பார் என வேதனையுடன் கூறியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment