விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருப்பவர் கோபிநாத்.இந்த நிகழ்ச்சி மூலம் பலரை வெகுவாக கவர்ந்தவர் இவர்.இந்த நிகழ்ச்சியில் சரியானது எதுவோ அதை மட்டும் இவர் பேசுவதால் இவரை பலருக்கும் பிடிக்கிறது.இவர் விஜய் தொலைக்காட்சியில் மட்டுமில்லாமல் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பிரபல தனியார் வானொலியில் பணியாற்றி வருகிறார்.இவரின் பேச்சுக்கே பல ரசிகர்கள் இவருக்கு உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தற்போது விஜய்டிவியின் நட்சத்திர தொகுப்பாளராக உள்ளார் கோபிநாத்.இவர் விஜய் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சியை முதல் முறையாக தொகுத்து வழங்கி சின்னத்திரைக்குள் நுழைந்தார் கோபி.அதேபோல் மேலும் சிகரம் தொட்ட மனிதர்கள்,நடந்தது என்ன என்று பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.இதில் இவருக்கு நீயா நானாவை விட நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்த நிகழ்ச்சி நடந்தது என்ன ஆகும்.அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாகினார்.
கோபிநாத் நிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்றுள்ளார்.அங்கு விலங்குகள் சரணாலயத்தினை சுற்றிபார்த்துள்ளார்.அப்போது அங்கு கட்டியிருந்த குட்டியானயிடம் கோபிநாத் செல்லவே அது அவரிடம் சண்டைக்கு செல்வதுபோல தும்பிக்கையை தூக்கிக்கொண்டு சென்றுள்ளது.இதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் கோபி இதுகிட்ட நீங்க பேசிலாம் சமாளிக்க முடியாது என ரசிகர்கள் கேலி செய்துள்ளனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in