யானை திரை விமர்சனம்

நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குன ஹரி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் யானை.இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.ராதிகா,சமுத்திரக்கனி,சஞ்சீவ் ,அம்மு அபிராமி, போஸ் வெங்கட் யோகிபாபு மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.காலை முதல் தொடங்கப்பட்ட காட்சிகளை மக்கள் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.படம் பார்த்து வெளியே வரும் பலர் கூறுவது படம் நன்றாக உள்ளது குடும்பத்துடன் பார்க்கலாம் என்று தான்.தற்போது இந்த படத்தின் விமர்சனத்தினை இங்கு காண்போம்

கட்டாயம் படிக்கவும்  அடையாளமே தெரியாமல் மாறிய அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி

யானை திரை விமர்சனம் 1

விளம்பரம்

படத்தின் கதை :

பி ஆர் வி என்ற குடும்பத்தின் இளைய மகன் அருண் விஜய்.இவருக்கு சமுத்திரக்கனி,சஞ்சீவ்,போஸ் வெங்கட் என மூன்று அண்ணன்கள் உள்ளனர்.இவர் அவர்களை அண்ணனாக பார்த்தாலும்,அவர்கள் இவரை இரண்டாம் தாரத்து பையனாக தான் பார்க்கின்றனர்.இந்நிலையில் பி ஆர் வி குடும்பத்தின் மீது உள்ள பழைய பகையால் வில்லன் ராமச்சந்திர ராஜு பழிவாங்க துடிக்க அதனை சமரசமாக சமாதானப்படுத்தும் முயற்சியில் அருண்விஜய் களம் இறங்குகிறார்.இறுதியில் அதில் அருண் விஜய் தோல்வி பெறவே , பி ஆர் வி குடும்பத்தில் சம்பவம் ஒன்று நடக்கிறது ,இதில் அருண் விஜய் கெட்டவனாக குடும்பத்திற்கு தெரிய அண்ணன் சமுத்திரக்கனி வீட்டை விட்டு வெளியே அருண்விஜயை அனுப்புகிறார்,எதிரியை எப்படி சமாளித்தார்,தனது குடும்பத்தினை எப்படி காப்பாற்றினார்,மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்தாரா என்பதே படத்தின் மீதி கதை

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  பேரன் பேத்திகளுடன் தீவில் விடுமுறையை கொண்டாடும் நடிகை ராதிகா சரத்குமார்

யானை திரை விமர்சனம் 2

படத்தின் விமர்சனம்:

விளம்பரம்

படத்தில் அருண் விஜய் நடிப்பு தாறுமாறாக அமைந்துள்ளது.மாலையுடன் என்ட்ரி கொடுக்கும் காட்சிகள் எல்லாம் சிலிர்க்க வைக்கிறது.ஆக்ஷன்,காதல்,சண்டை என ஒட்டுமொத்தத்தையும் கரைத்து குடித்துள்ளார் அருண் விஜய்.படத்தில் அனைவரது நடிப்பும் சிறப்பாக உள்ளது அதேபோல் கதாபாத்திர தேர்ந்தெடுப்பு அருமையாக அமைந்துள்ளது.வில்லனாக வந்த ராமச்சந்திரன் பார்க்கும் நம்மையும் சேர்த்து பயம்காட்டிவிட்டார்.இருப்பினும் பழைய ஹரிபடம் போல இல்லை,சில இடங்களில் தொய்வு மற்றும் சலிப்புகள் அதிகம் ஏற்படுகிறது.ஜிவி பிரகாஷின் பாடல்கள் படத்தில் எடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஒவ்வொரு கதாபாத்திரமும் தனக்கான பங்குகளை சரியாக செய்துள்ளனர்.கதை மட்டும் சரியாக தொய்வில்லாமல் இருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.படத்தில் நெகட்டிவ் என்றால் தேவையற்ற இடங்களில் பாடல்கள் மற்றும் நகைச்சுவை காட்சிகள் சுத்தமாக படத்திற்கு பொருந்தவில்லை.

கட்டாயம் படிக்கவும்  தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நாயகி பவித்ராவின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

மொத்தத்தில் யானை ….பலம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment