வீடியோ பதிவிட்டு தேம்பி அழுத யாஷிகா!!ஏன் தெரியுமா?

கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் யாஷிகா ஆனந்த்.இவர் அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும்,இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவர் இளைஞர்களிடம் பிரபலம் அடைய தொடங்கினார்.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி தனது சிறப்பான விளையாட்டை காண்பித்து மக்களை கவர்ந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மனைவி ப்ரியா உடன் ரொமேன்டிக் புகைப்படம் எடுத்த அட்லீ

வீடியோ பதிவிட்டு தேம்பி அழுத யாஷிகா!!ஏன் தெரியுமா? 1

விளம்பரம்

அண்மையில் இவருக்கு விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் தனது உயிர்தோழியை இழந்த யாஷிகா அந்த துயரத்தில் இருந்து தற்போது மீண்டுள்ளார்.இந்நிலையில் சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் யாஷிகா.பல முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடிப்பதற்கு யாஷிகா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது இவர் நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்திருக்கும் கடமையை செய் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது ரீல்ஸ்களை பதிவிட்டு இளைஞர்களை சுண்டி இழுத்து வருகிறார்.இவரது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்ப்பதற்கே பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் அவ்வப்போது எடுத்து பதிவிட்டு வரும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் மாபெரும் வைரலாவது வழக்கம் ஆகும்

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடிய நடிகர் அருண்விஜய்

வீடியோ பதிவிட்டு தேம்பி அழுத யாஷிகா!!ஏன் தெரியுமா? 2

விளம்பரம்

இந்நிலையில் இவர் இன்று பதிவிட்ட வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதில் நடிகை யாஷிகா தேம்பி அழுதது போன்று முகம் அமைந்துள்ளது.இறுதியில் அது இன்ஸ்டாகிராமில் புதியதாக வந்த பில்டர் ஆப்ஷன் என்பது தெரியவந்தது.இந்த வீடியோவை கண்டு இவரது ரசிகர்கள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர்.இறுதியில் இது பொய் என தெரியவே அவரது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

கட்டாயம் படிக்கவும்  திடீரென வீடியோ வெளியிட்டு கண் கலங்கிய இளையராஜா… இதான் காரணமா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment