The Indian Times

நீ துரோகம் பண்ணிட்ட சுருதி” கதறி அழுகும் தாமரை!

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் மக்களிடம் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றுக்கொண்டிருக்கும் பிக்பாஸின் ஐந்தாவது சீசன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ஏற்கனவே சூடு பிடித்திருக்கும் பிக்பாஸ் தற்போது தனது அடுத்த கியரை மாற்ற தொடங்கியுள்ளது.காயிண் டாஸ்க்கின் நோக்கம் மெல்ல மெல்ல நிறைவேறி கொண்டிருக்கிறது. போட்டியாளர்களுக்கு மத்தியில் சகல சிக்கல்களையும் இந்த டாஸ்க் உருவாக்கி கொண்டிருக்கிறது. அதன் விளைவாக இன்றைய நாளில் சுருதி மற்றும் தாமரைக்கு இடையிலான சிக்கல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

Advertisement

இருவரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்வதும் ” உன் மேல நான் செம்ம கோவத்துல இருக்க”னு தாமரை கூறுவதும். அதற்கு சுருதி கடுப்பாவதும் “என் வளர்ப்பு பத்தி பேசிட்டாங்க, நீலாம் ஒரு புள்ளையானு கேட்டுட்டாங்க, உனக்கு அசிங்கமா இல்லையானு கேட்டுட்டாங்க..”என பதில் கூறுவதும் அழுகையுமென இன்றைய நாள் சுவாரஸ்யமான ஒன்றாக அமைய போகிறது.தாமரையை சுற்றி நடைபெறும் காட்சிகளும், தாமரையின் பேச்சும் அவற்றில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

தாமரையின் பேச்சும் சுருதியின் பேச்சும் குழாய் சண்டையை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளதாக இருக்கிறது. இதனால் இன்றைய நிகழ்ச்சியை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.மேலும் யார் யார் பக்கம் நிற்கிறார்கள் என்பது இன்றைய நிகழ்ச்சியில் இன்னும் தெள்ள தெளிவாய் தெரிய வருமென்று எதிர்பார்க்க படுகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in