நான் கமல் சார்டயே பேசிக்குறேன் – கொதிக்கும் இசைவாணி!

கடந்த நான்கு சீசன்களாக மக்களை பெரிதும் கவர்ந்து டிஆர்பியில் விஜய் தொலைகாட்சியை மேலேற்றிய பிக்பாஸின் ஐந்தாவது சீசன்,தற்போது விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. பொது மக்கள் மத்தியில் பிக்பாஸின் தாக்கத்தை நாம் நன்கு அறிவோம்! உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குவதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

நான் கமல் சார்டயே பேசிக்குறேன் - கொதிக்கும் இசைவாணி! 1டாஸ்க்கு மேலே டாஸ்க்கு வந்து அவர்களை கொதிக்க வைக்குற நேரமிது”
டாஸ்க்குகளை கொடுத்து கொடுத்து போட்டியாளர்களின் உணர்வை மாற்றும் வெளிப்படுத்த செய்வதுதான் பிக்பாஸின் முக்கிய நோக்கம்.டாஸ்க்கின் மூலமாக அந்நோக்கம் மெல்ல மெல்ல நிறைவேறி கொண்டிருக்கிறது. போட்டியாளர்களுக்கு மத்தியில் சகல சிக்கல்களையும் டாஸ்க்குகள் உருவாக்கி கொண்டிருக்கிறது. டாஸ்க் மட்டுமே காரணமில்லை போட்டியாளர்களுக்கு இடையில் எழும் வேறுபட்ட எண்ணங்களும் கருத்துகளும் பிக்பாஸை மேலும் சுவாரஸ்யமானதாக ஆக்குகின்றன.ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மற்றும் ஞாயிறுகளில் கமல்ஹாசன் வந்து அவரது பார்வையை நடுநிலைத்தன்மையை எடுத்துரைப்பது போட்டியளர்களை வசை பாடுவதென இரண்டு நாட்களும் மற்ற நாட்களை விட இன்னும் சற்று அதிகமாகவே களைகட்டி விடுகின்றன.

விளம்பரம்

பாவ்ணி மற்றும் மதுவின் நேற்றைய சோதனையை நாம் அனவைரும் கண்டோம். இந்நிலையில்தான் இன்றைய பிக்பாஸ் எபிசோடுக்கான முதல் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

விளம்பரம்

அதன்படி, இன்றைய புரோமோவில் இசைவாணிக்கும் தாமரைக்கும் இடையில் நேரும் கருத்து மோதல்கள் காண்பிக்கப்பட்டுள்ளன

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment