The Indian Times

“அமீர்-பாவனி காதலா?” பிக் பாஸில் வெளிவராத உண்மையை உடைத்த அபிஷேக்! Abhishek First Interview After Bigg Boss

பிக் பாஸ் வீட்டில் இதுவரை யாருமே இரண்டு தடவை ஒரே சீசனில் போட்டியிட்டதாக அதுவும் தமிழ் நிகழ்ச்சியில் யாரும் பங்கேற்றுள்ளதாக தெரியவில்லை! அப்படி ஒரு நபர் என்றால் அது சினிமா பையன் என்று மக்களால் அழைக்கப்படுபவர் தான் அபிஷேக்! இவர் மதுரை மண்ணில் பிறந்து வளர்ந்து படிப்பில் நன்கு சிறந்து விளங்கியதால் சிறு வயதிலேயே மறைந்த அப்துல் கலாம் அவர்களிடம் பரிசு வாங்கியதும் அனைவரும் அறிந்ததே! சிறு வயதில் இருந்தே மிகுந்த அறிவுவளம் இருந்ததாலேயே என்னவோ நன்கு வாய் பேசுவதிலும் வல்லவர் இவர் என்றே சொல்லலாம்!

Advertisement

படிப்பு முடித்தவுடனே ஊடக வேலைக்கு சென்று அங்கு மிகுந்த ஆர்வம் கொண்டு பணியாற்றி படிப்படியாக முன்னேறியவர் என்றால் அது மிகையாகாது! பிறகு இவரது பாணியில் சினிமா படங்களையும் பிரபலங்களையும் விமர்சிக்க தொடங்கினார்! விமர்சனங்களை தவிர்த்து பல பொல்லாப்புக்கள் இவரை வந்து சேர்ந்தது என்பதே உண்மை! சர்ச்சைகளால் பிரபலம் ஆனவர் என்றும் இவரை சொன்னால் அது மிகையாகாது! அதுமட்டுமில்லாமல் கமல் ஹாசன் அவர்களின் தீவிர ரசிகர் என்பதும் அனைவரும் அறிந்த ஒரு செய்தியே! இப்படி நாளுக்கு நாள் உழைப்பாலும் இவர் வளர்த்து வாய்த்த வம்புகளாலும் புகழின் உச்சத்திற்கு சென்ற இவர் இப்பொழுது வந்து சேர்ந்த இடம் தான் பிக் பாஸ்! வந்த நாள் முதலே சுவாரஸ்யம் கூட்ட வேண்டும் என்ற காரணத்திற்காகவே இவர் கொளுத்தி போட தொடங்கியது மக்கள் மத்தியில் இவர்மேல் கடுப்பு அலைகளை பெருக்க தொடங்கியது!

Advertisement

நாளுக்கு நாள் இவர் செய்யும் செயல்களை மக்கள் பொறுத்துக்கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர்! அதன்பின்பு மௌனம் காத்த இவர் பேட்டி கொடுக்காமல் மறைந்து இருந்தார்! பிறகு சில வாரங்களுக்கு பிறகு பெட்டிக்குள் இருந்து பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து மக்களுக்கு மீண்டும் அதிருப்தி அடைந்தனர்! வந்த 2 வாரங்களிலேயே வீட்டுக்கு மக்கள் அனுப்பிவைத்த நிலையில் மக்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார்! அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in