எங்க ARSH-க்கு முதல் மொட்டை போட்டாச்சு….மகிழ்ச்சியில் சஞ்சீவ் & ஆல்யா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் நடித்து மிக பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.தற்போது ராஜா ராணி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது செம்பா மற்றும் கார்த்திக் கதாபாத்திரங்கள் தான்.அந்த அளவிற்கு இந்த சீரியல் நமது மனதில் பதிந்துவிட்டது.ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா. சஞ்சீவிற்கும் ஆல்யாவிற்கும் நாடகத்தில் நடித்ததன் மூலம் ஏற்பட்ட நட்பு இறுதியில் காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

எங்க ARSH-க்கு முதல் மொட்டை போட்டாச்சு....மகிழ்ச்சியில் சஞ்சீவ் & ஆல்யா 1

விளம்பரம்

இவர்களுக்கு தற்போது பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை உள்ளது.இருவரும் தங்களது குழந்தைகளுடன் அதிக நேரத்தினை செலவழித்து வருகின்றனர்.தங்களுக்கென்ற யுடியூன் சேனல் ஒன்றை வைத்து அதில் தனது மகன் மற்றும் மகள் உடன் வீடியோ எடுத்து அதனை யூடியூப் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.இவர்களது யூடியூப் வீடியோக்களை காண பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அண்மையில் குடும்பத்துடன் விடுமுறைக்கு சென்று அதனை வீடியோவாக எடுத்து யூடியூபில் பதிவேற்றி இருந்தனர்,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.தற்போது இவர்கள் மகன் ஆர்ஷ்க்கு முதல் மொட்டை அடித்துள்ளனர்.

எங்க ARSH-க்கு முதல் மொட்டை போட்டாச்சு....மகிழ்ச்சியில் சஞ்சீவ் & ஆல்யா 2

விளம்பரம்

பிறக்கும் குழந்தைகளுக்கு முதல் மொட்டை என்பது முக்கியமான ஒன்றாகும்.அதனை குடும்பத்துடன் கொண்டாடுவது வழக்கம் ஆன ஒன்று.தற்போது சஞ்சீவ் மற்றும் ஆல்யா தம்பதியினர் தங்கள் மகனுக்கு முதல் மொட்டையை தனது குடும்பத்தினரை அழைத்து விழா நடத்தியுள்ளார்.இந்த நிகழ்வை வீடியோவாக எடுத்து தங்களது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த அனைவரும் அழகிய தம்பதியினர் நீங்கள் இருவரும் என கூறி கமெண்ட் செய்து வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

Embed video credits : SANJIEV & ALYA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment