அசிங்கமான பேச்சுக்கள்.. சிம்பு பற்றி விமர்சனம்.. வெளியே தள்ளிய பிக்பாஸ் | BiggBoss Ultimate
சன் டிவியின் பிரபல செய்தி வாசப்பாளர் அனிதா சம்பத். நல்ல குரல் வளமும், அழகான உச்சரிப்பும் கொண்டவர். இவர் தொலைக்காட்சியில் தோன்றிய சில நாட்கள் கழித்து திடீரென ஒருநாள் அனிதா சம்பத்தின் பெயரும் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் பரவியது. ஒரே நாளில் அனிதா சம்பத் பிரபலமானார். பெண்களுக்கு இவர் அணியும் சேலை, நகைகள் மீது அலாதி பிரியம். இப்படி திடீரென கிடைத்த புகழைக் கொண்டு அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார். சரியான புரிதல் இல்லாமலும், எதற்கெடுத்தாலும் சண்டை சண்டை என இருந்த காரணத்தினால் மக்கள் இவரை வெளியேற்றினர்.

அதீதமான சிந்தனை, மற்ற போட்டியாளர்களை பற்றிய விமர்சனம், யாராவது எதாவது சொன்னால் உடனே அழுகை, சண்டை என பார்ப்பவர்களுக்கு தலைவலியாக இருந்தார். இதனால் பாதிலேயே மக்கள் இவரை வெளியேற்றிவிட்டனர். வெளியேறிய பின்னர் இவருக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது சன்டிவியில் சில நாடகங்களிலும் நடித்து வந்தார். இவரின் இது போன்ற செயல்பாடுகளால் இவருக்கு ஹேட்டர்ஸும் நெகடிங் கமெண்ட்ஸ்ம் அதிகம். இவர் ஒருவரைப் பற்றி அதிகமாக யோசித்து கேம் விளையாடுவார், ஒருவர் காமெடியாக ஒரு விசயத்தைக் கூறினாலும் அதை ஊதி பெரிதாக்கிவிடுவார் என்பவை இவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள். YouTube Video Code Embed Credits: Galatta

இந்த நிலையில் இவர் பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இங்கும் வந்தும் அதே போல எதற்கெடுத்தாலும் சண்டை அழுகை என பார்ப்பவர்களை கடுப்பேற்றி கொண்டிருந்தார். மேலும் நீருப் பாட்டிலை எடுத்து வை என்று சொன்னதற்கு கெட்ட வார்த்தையில் பேசி முகம் சுளிக்க வைத்தார். மேலும் புதிதாக நிகழ்ச்சியை தொகுக்க வந்த சிம்புவுக்கு எதுவுமே தெரியாது என்று அவரைப் பற்றியும் விமர்சனம் வைத்தார். இதையெல்லாம் வைத்து பிக்பாஸ் அவரை வெளியேற்றியுள்ளதாக தெரிகிறது. கலக்கப்போவது யாரு சதீஷ்தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அனிதா சம்பத் வெளியேறியுள்ளர். அந்த செய்தியை நீங்களும் காண… Watch the below Video..
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in