The Indian Times

பப்ளிசிட்டிக்காக செய்த கேவலமான செயல் கண்டுபிடித்து விளாசும் நெட்டிசன்கள்

செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.  ஜூலியை மிஞ்சிவிட்டார் அனிதா சம்பத். இதனாலேயே அவரை ரசிர்கள் கழுவி ஊற்றி வரும் நிலையில் அவரது அப்பாவும் சில்றத்தனமான ஒரு வேலையை செய்து சமூக வலைதளங்களில் சின்னாபின்னமாகி வருகிறார்.

Advertisement

அதாவது அனிதா பிக்பாஸ் வீட்டில் நடந்து கொள்ளும் முறை குறித்த யூட்யூப் ஒன்றின் விமர்சனத்திற்கு, தான் ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் என கூறி கமெண்ட் போட்டுள்ளார். அதில் அவர் தங்கிலீஷில் பதிவிட்டிருப்பதாவது, “ஹலோ நாக்குல நரம்பு இல்லாம பேசாதீங்க. அனிதா சம்பத் எனக்கு தெரிஞ்சவங்க..நான் 10வது பீஸ் கட்ட காசு இல்ல. 6 மாத பீஸ கட்டினாதான் எக்ஸாம் எழுத முடியும்னு ஸ்கூல்ல சொன்னாங்க.

Advertisement

அப்போ அனிதா சம்பத் அவங்கதான் எனக்கு ஃபீஸ் கட்டினாங்க. அப்புறம் நான் எக்ஸாம் எழுதினேன். ஒரு வார்த்தை தெரியாம பேசிட்டாங்கன்னு அவங்கள கெட்டவங்கன்னு முத்திரை குத்தாதீங்க பீப்பிள்ஸ்”. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பத் ஜி என்ற பெயரில் உள்ள அந்த நபர் அனிதாவின் அப்பாதான் என்பதை நெட்டிசன்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். யூட்யூப் சேனல் ஒன்றிற்கு பதிவிட்ட கமெண்ட்டில் தனது ஐடி பெயரையும் போட்டோவையும் மாற்றாமல் இப்படி ஒரு சீப்பான வேலையை செய்துள்ளார் அனிதாவின் அப்பா. இதனை பார்த்த நெட்டிசன்கள், அந்த கமெண்ட் அவருடைய போட்டோ மற்றும் அனிதா சம்பத் ஃபேமிலி போட்டோ என போட்டு கழுவி ஊற்றியுள்ளனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in