அரண்மனை 3 படத்தின் கதை இது தான்! அரண்மனை 3 விமர்சனம்

இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் அரண்மனை 3. சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா , ராஷி கண்ணா, ஆண்ட்ரியா , விவேக் , யோகிபாபு என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் அரண்மனை 3. இதற்கு முன்பே இந்த படத்தின் அரண்மனை 1 , அரண்மனை 2 என இரண்டு பாகங்கள் வெளியாகி இருந்தது. இதில் அரண்மனை 1 வெற்றி பெற்ற அளவிற்கு இரண்டாவது பாகம் வெற்றி அடையவில்லை. இந்நிலையில் தற்போது இந்த மூன்றாவது பாகம்

அரண்மனை 3 படத்தின் கதை இது தான்! அரண்மனை 3 விமர்சனம் 1

விளம்பரம்

வெளியாகியுள்ளது. இந்த படத்தின் கதை என்னவென்றால் ஆண்ட்ரியா அரண்மனையின் ராணியாக இருக்கிறார். அவருக்கு குழந்தை பிறந்ததும் சில காரணங்களுக்காக கொல்லப்படுகிறார். அவரது ஆன்மாவை அரண்மனையில் உள்ள அறையை மந்திரித்து பூட்டி அடைத்து வைக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு பிறகு ராஷி கண்ணா அந்த அறைக்குள் சென்றுவிடுகிறார். அதன் பிறகு ஆண்ட்ரியாவின்

அரண்மனை 3 படத்தின் கதை இது தான்! அரண்மனை 3 விமர்சனம் 2

விளம்பரம்

ஆவி விடுவிக்கப்படுகிறது. அந்த ஆவி ஆர்யாவின் உடம்பில் புகுந்து தன்னை கொன்றவர்களை பழிவாங்குகிறது. இதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் படத்தின் கதை. தற்போது இந்த படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்த்த பலர் படம் சுமார் தான் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதற்கு முக்கிய காரணம் இந்த கதையை பல படங்களில் நாம் பார்த்திருக்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.

அரண்மனை 3 படத்தின் கதை இது தான்! அரண்மனை 3 விமர்சனம் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment