The Indian Times

எழில் கட்டிய தாலியை கழட்டிவிட்டு அமிர்தாவுக்கு தாலி கட்ட போகும் கணேஷ்… பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிலையில் அமிர்தா கணேஷ் இறந்த நிலையில் எழிலை திருமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளார்,மேலும் முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈஸ்வரி அமிர்தாவை ஏற்றுக்கொண்டு பாக்கியா குடும்பம் மகிழ்ச்சியாக சென்று வருகிறது. இறந்து போனதாக நினைத்த அமிர்தாவின் கணவர் கணேஷ் மீண்டும் வந்துள்ளார்.அவரை கண்டு அப்பா அம்மா மகிழ்ச்சியாகவே ,மீண்டும் வந்த அவர் அமிர்தா மற்றும் குழந்தையை வீட்டில் தேடுகிறார் ,மேலும் அமிர்தாவுக்கு திருமணம் ஆனதையும் தெரிந்துகொள்கிறார்

கணேஷ் அமிர்தாவின் கழுத்தில் கத்தியை வைத்து குழந்தையையும் அமிர்தாவையும் கடத்தி செல்கிறார். அவரை காப்பாற்ற பாக்கியா பின்னால் ஓடுகிறார். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில், எழில் கட்டிய தாலியை எடுத்துவிட்டு, கணேஷ் அமிர்தாவுக்கு தாலி கட்ட செல்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in