The Indian Times

கண்ணம்மாவை தெரு தெருவாக தேடி அலையும் பாரதி…பார்க்கவே பாவமா இருக்கே… பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.அது என்னவென்றால் இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.சீரியலில் பாரதி கண்ணம்மா குழந்தைகளுடன் டி என் ஏ டெஸ்ட் எடுத்துள்ளார்.இந்த டெஸ்ட் முடிவுகளை அறிய நேரடியாக டெல்லிக்கு சென்றார் அங்கு ஹேமாவும் லக்ஷ்மியும் இவரது குழந்தைகள் தான் டிஎன்ஏ ஒற்றுப்போவதாக கூறவே பயங்கர அதிர்ச்சி அடைந்து நமது மனைவியையும் குழந்தைகளையும் இப்படி சந்தேகப்பட்டுவிட்டாயாமே என வேதனை கொள்கிறார்.

தன்னுடன் மீண்டும் வந்து வாழ வேண்டும் என கண்ணம்மாவிடம் பாரதி கெஞ்சி கேட்க,பாரதியை மன்னிக்க முடியாமல் குழந்தைகளுடன் கண்ணம்மா ஊரை விட்டு செல்கிறார்.தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,ப்ரோமோவில் பாரதி ,கண்ணம்மாவையும்,குழந்தைகளையும் தேடி தெரு தெருவாக திரிகிறார்.மேலும் அவர்களை காணவில்லையே என மன வேதனையும் கொள்வது ரசிகர்களுக்கு அவர் மேல் இரக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த ப்ரோமோவில் ரசிகர்கள்,கண்ணம்மா பாரதியை ஏத்துக்கோங்க என கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in