The Indian Times

அடிதடிக்கு சரியான TASK கொடுத்த பிக் பாஸ்… பயத்தில் போட்டியாளர்கள்… என்ன ஆக போகுதோ இந்த வாரம் | bigg boss promo

தமிழில் 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 6வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி அக்டொபர் 9ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது.100 நாட்கள் 20க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டிபோட்டு இறுதியில் வெல்பவருக்கு 50 லட்சம் பணமும் பிக் பாஸ் டைட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் அங்குள்ள நடிகர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்,முதல் எலிமினேஷனாக சாந்தி மாஸ்டர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.இரண்டாவதாக அசல் வெளியேறினார்.மூன்றாவதாக ஷெரினா வெளியேறியுள்ளார்.

Advertisement

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் போட்டியாளர்களை இரண்டு அணிகளாக பிரித்து கடைகளை வைக்க கூறியுள்ளது.24 மணி நேரமும் பொருட்களை தயாரித்து அனுப்பிவிட வேணும் என பிக் பாஸ் கூறியுள்ளார்.மேலும் தங்களின் பொருட்கள் மற்றும் கல்லா பெட்டியை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது அணியினரின் கடமை என கூறியுள்ளார்,இதனால் பிறரின் பொருட்களை எடுக்கும்பொழுது கண்டிப்பாக சண்டை வரும் என போட்டியாளர்கள் கூறியுள்ளனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in