The Indian Times

சற்றும் எதிர்பாராமல் பிக் பாஸில் இருந்து வெளியேறிய அதிரடி பெண் போட்டியாளர்

தமிழில் 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 6வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி அக்டொபர் 9ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது.100 நாட்கள் 20க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டிபோட்டு இறுதியில் வெல்பவருக்கு 50 லட்சம் பணமும் பிக் பாஸ் டைட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் அங்குள்ள நடிகர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்,முதல் எலிமினேஷனாக சாந்தி மாஸ்டர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.இரண்டாவதாக அசல் வெளியேறினார்.மூன்றாவதாக ஷெரினா வெளியேறியுள்ளார்.நான்காவதாக மகேஸ்வரி வெளியேறியுள்ளார்.ஐந்தாவதாக நிவாஷினி வெளியேறியுள்ளார்.ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார். ஏழாவதாக குயின்சி,எட்டாவதாக ராம் வெளியேறியுள்ளார்,ஒன்பதாவதாக ஆயீஷா வெளியேறியுள்ளார்

Advertisement

தற்போது இந்த வாரம் வெளியே செல்ல நாமினேட் ஆகிய போட்டியாளர்கள் அசீம்,விக்ரமன்,ரட்சிதா,ஜனனி,ஏடிகே,மணிகண்டன் ஆகியவர்கள் ஆகும்.இதில் குறைந்த அளவு வாக்குகளை பெற்றிருந்த மணிகண்டன் வெளியே செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது வாக்குகள் அதிகமாகி,ஜனனி வாக்குகள் குறைந்ததால் இந்த வாரம் பத்தாவது போட்டியாளராக ஜனனி வெளியே செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.ரசிகர்கள் பலரும் ஜனனி சிறப்பாக விளையாண்டதாக கூறி அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in