பணமூட்டையை கொடுத்த பிக் பாஸ்… யார் இந்த முறை பணத்துடன் வெளியேறுவார்… bigg boss promo

பிக் பாஸ் 6வது சீசன் கடந்த அக்டொபர் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.இன்னும் இறுதி கட்டத்துக்கு போட்டி செல்ல குறைவான நாட்களே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

பணமூட்டையை கொடுத்த பிக் பாஸ்... யார் இந்த முறை பணத்துடன் வெளியேறுவார்... bigg boss promo 1

விளம்பரம்

நாளுக்கு நாள் போட்டியாளர்கள் தங்களது திறமைகளை அதிகப்படுத்தி விளையாண்டு சண்டையிட்டு மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.இதுவரை வீட்டில் இருந்து ஜிபி முத்து,சாந்தி,அசல்,மற்றும் ஷெரினா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.நான்காவது எலிமினேஷன் ஆக மகேஸ்வரி சென்றார். ஐந்தாவதாக நிவாஷினி வெளியேறியுள்ளார்.ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார். ஏழாவதாக குயின்சி வெளியே சென்றுள்ளார்.எட்டாவதாக ராம் வெளியேறியுள்ளார்.ஒன்பதாவதாக ஆயீஷா வெளியேறியுள்ளார்.பத்தாவதாக ஜனனி வெளியேறியுள்ளார்.பதினொராவதாக தனலட்சுமி வெளியேறியுள்ளார். பன்னிரெண்டாவதாக மணிகண்டன் வெளியேறியுள்ளார். பதிமூன்றாவதாக ரட்சிதா வெளியேறியுள்ளார்.தற்போது மீதமுள்ள போட்டியாளர்களிடம் போட்டி கடுமையாக நடைபெற்று வருகிறது.

பணமூட்டையை கொடுத்த பிக் பாஸ்... யார் இந்த முறை பணத்துடன் வெளியேறுவார்... bigg boss promo 2

விளம்பரம்

புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,ப்ரோமோவில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பண மூட்டையை கொடுத்துள்ளார். பணத்தினை எடுத்துக்கொண்டு யார் வேண்டுமானாலும் தற்போது வெளியாகலாம் என பிக் பாஸ் அறிவித்துள்ளார். போட்டியாளர்கள் எடுக்கலாமா வேண்டாமா என ஆழ்ந்த யோசனையில் உள்ளனர்.இந்த முறை யார் வெளியே செல்வார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment