The Indian Times

போலீசில் பரபரப்பு புகார் அளித்த BIGGBOSS 6 பிரபலம்….

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் விஜே மகேஸ்வரி.அங்கிருந்து படிப்படியாக பிற சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளினியாக உருவெடுத்தார்.பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார் இவர்.மேலும் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் தொகுப்பாளினியாக இருந்த காலகட்டத்திலேயே ரசிகர்கள் இவருக்கு அதிகம்.

Advertisement

மகேஸ்வரிக்கு திருமணம் ஆகி பையன் இருக்கிறார்.கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது மகனை தனது உழைப்பில் படிக்க வைத்து வருகிறார்.தற்போது மகேஸ்வரிக்கு பிக் பாஸ் 6 வது சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கி வருகிறார்.போட்டியாளர்களிடம் தற்போது சண்டையை ஆரம்பிப்பதே மகேஸ்வரியாகத்தான் இருந்தார்.மகேஸ்வரி நன்றாக விளையாடி வந்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.மகேஸ்வரி சென்ற பின்பு நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைய தொடங்கியது.

வெளியே வந்த இவர் மீது அசீம் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை வைத்து வந்தனர்,இவர் பேட்டிகளில் அசீம் பற்றி பேசியதற்கு அவரது ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் ,நாளடைவில் மகேஸ்வரியின் மகன் குறித்து தவறாக பேசியதால் பல முறை எச்சரித்தார்,இருந்தும் தொடர்ந்து இருவரையும் விமர்சித்து வந்ததால் பொறுக்க முடியாமல் போலீசில் புகார் அளித்துள்ளார்,புகாரை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.பலரும் மகேஸ்வரியின் இந்த தைரியத்தினை பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in