தண்ணீரில் தவித்த நாயை காப்பாற்றிய டால்பின்! இணையத்தில் பரவி வரும் வைரல் வீடியோ இதோ!!

மனிதர்களை மனிதனாய் அடையாளம் காட்டுவது ஆறாவது அறிவு தான். சிந்தித்து நல்லது எது கெட்டது எது என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப நடந்து கொள்வதே அவற்றின் சிறப்பம்சமாகும். இது ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு இல்லாததாலேயே இவைகள் நம்மை விட வேறுபட முக்கிய காரணமாகும். நடைபெறும் நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் போது மனிதனை விட விலங்குகளே சிறந்தவையாக கருதப்படுகிறது!

தண்ணீரில் தவித்த நாயை காப்பாற்றிய டால்பின்! இணையத்தில் பரவி வரும் வைரல் வீடியோ இதோ!! 1

விளம்பரம்

சுயநல உலகில் மனிதனை மனிதனே ஏமாற்றி கொள்ளும் இந்த காலத்தில் பிற உயிர்களிடம் அன்பை அளவற்று கொடுக்கும் விலங்குகளே சிறந்தவையாக கருதப்பட காரணம். தண்ணீரில் தத்தளிக்கும் நாயை காப்பாற்றிய டால்பின் வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் தண்ணீரில் உயிருக்காக போராடிய நாயை இந்த டால்பின் மீன் காப்பாற்றும் காட்சி பார்ப்பவர் மனதை கண்ணீர் மூலம் கவரும் வண்ணம் உள்ளது. மனிதனுக்கு மனிதன் மட்டுமே உதவ தயங்குவது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. ஐந்தறிவு என யாரை நாம் உதாசீன படுத்துகிறோமோ அவைதான் சுயநலமின்றி சக உயிர்களிடம் அன்பு பாராட்டி வருகிறது.

தண்ணீரில் தவித்த நாயை காப்பாற்றிய டால்பின்! இணையத்தில் பரவி வரும் வைரல் வீடியோ இதோ!! 2

விளம்பரம்

பகுத்தறியும் திறன் கொண்டு இந்த ஜீவன்கள் படைக்கப்பட்டிருந்தால் இன்று இவை இப்படி பேதமின்றி பழகி இருக்குமா என்பது கேள்விக்குறியே! சாதி, மதம், இனம், மொழி என பல்வகை காரணிகளால் பிரிந்து கிடக்கும் மனித குலம் தெளிவு பெரும் நாள் எப்போதோ! நெஞ்சை நெகிழ வைக்கும் இந்த விடியோவை நீங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் கண்டுகளியுங்கள்! Watch the video below..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment