ரோஜா படம் பார்த்து நானே என்னை செருப்பாலேயே அடித்துக்கொண்டேன்..பிரபல தமிழ் நடிகை கதறல்

1992 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் அரவிந்த்சாமி கதாநாயகனாக நடித்து வெளியாகிய படம் ரோஜா.இப்படத்தில் கதாநாயகியாக மதுபாலா நடித்திருந்தார்.காதல்,ஆக்ஷன்,தீவிரவாதிகள் என படம் அனைத்தையும் கொண்ட கலவையாக அமைந்திருந்தது.இதனால் இப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.இன்று வரை இப்படம் டிவியில் ஒளிபரப்பானால் பார்க்கும் ரசிகர்களும் உள்ளனர்,அந்தளவிற்கு இந்த படம் அவர்களின் மனதில் பதிந்து விட்டது.

ரோஜா படம் பார்த்து நானே என்னை செருப்பாலேயே அடித்துக்கொண்டேன்..பிரபல தமிழ் நடிகை கதறல் 1

விளம்பரம்

ஏ ஆர் ரஹ்மான் இசையில் இப்படத்தில் உருவாகியுள்ள பாடல் இன்றுவரை பலரது செல்போன்கள்,வாகனங்களில் ஒலித்து வருகிறது.அந்தளவிற்கு இந்த படம் மக்களை அடைந்துள்ளது.இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகை லட்சுமி அவர்களின் மகள் ஐஸ்வர்யா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது,ரோஜா படம் பார்த்தேன்,அதனை பார்த்த பிறகு என்னை நானே செருப்பால் அடித்துக்கொண்டேன் என கூறி அனைவரையும் பரபரப்பாக்கினார்.

ரோஜா படம் பார்த்து நானே என்னை செருப்பாலேயே அடித்துக்கொண்டேன்..பிரபல தமிழ் நடிகை கதறல் 2

விளம்பரம்

பின்னர் அவர் கூறியதாவது,படத்தின் கதையை தயார் செய்த உடன் மணிரத்தினம் முதலில் என்னை தான் கதாநாயகியாக நடிக்க அணுகினர்.ஆனால் நான் அப்போது தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதால்,இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.அதே சமயம் நான் நடித்த தெலுங்கு படமும் ட்ராப் ஆகிவிட்டது.ரோஜா படத்தினை திரையில் பார்த்தேன் என்னை நானே செருப்பால் அடித்துக் கொண்டேன். இன்று வரை, இந்த மாதிரியான ஒரு படத்தில் நடிக்க தவறியதை நினைத்து இப்பவும் நான் கவலைப்படுகிறேன்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment