The Indian Times

“ராஜு கேட்டதுல தப்பே இல்ல” பாவனி – அபிநய்க்கு எதிராக மாறி பதிலளித்து மாஸ் காட்டிய இசைவாணி! Isaivani Slams Thamarai in an Interview

சாமானிய மக்களில் இருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக அதிலும் முதல் ஆளாக களம் இறங்கியவர் தான் இசைவாணி! கானா பாடல்கள் என்றால் ஆண்கள் தான் நினைவுக்கு வருவார்கள்! ஆனால் பெண்கள் கானா பாடல் பாடுதல் அரிதிலும் அரிது! அப்படி பெண் கானா பாடல் பாடுபவராக களமிறங்கி தனக்கென தனி இடம் சமூகத்தில் இடம்பிடித்தவர் தான் இசைவாணி என்றால் அது மிகையாகாது! பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் போட்டியாளராக நுழைந்த இவருக்கு சாமானிய மக்களின் ஆதரவு அதிகமாக இருந்தது என்றே சொல்லலாம்! அதனால் தான் 47 நாட்களுக்கு மக்களாக வீட்டிற்குள் இருந்தார்!

Advertisement

ஆனாலும், பிக் பாஸ் விளையாட்டை பற்றி போதிய புரிதல் இல்லாததன் காரணமாகவே இவர் வெளியேற்றப்பட்டார் என்பது பொதுமக்களின் பொதுவான கருத்து! அதுமட்டுமில்லாமல் தேவையில்லாத இடத்தில் சண்டை போடு வீட்டில் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் சின்ன சின்ன விஷயத்துக்கும் மனக்கசப்பு ஏற்படும் போது இவரால் ஆட்டம் விறுவிறுப்பு இல்லாமல் போவது நிதர்சனமான உண்மை! அண்ணாச்சிக்கும் இசைவாணிக்கும் இருந்த மனக்கசப்புக்களை விட தாமரைக்கும் இசைவாணிக்கும் இருந்த மனக்கசப்புகளே அதிகம் என்று சொல்லலாம்! அதனால் தான் என்னவோ மக்கள் இவருக்கு வாக்குகள் குறைவாக அளித்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டனர்!

Advertisement

இப்பொழுது வீட்டை விட்டு வெளியேறிய பின் இசைவாணி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் மக்களிடம் பேசினார்! அப்பொழுது ஒவ்வொருவரின் கேள்விக்கு அவரது பாணியில் அவர் பதிலளித்து வந்தார்! அப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி அவர் கூறிய பதில் சமூக வலைத்தளங்களில் வைரலானது! இப்பொழுது பிக் பாஸை விட்டு வெளியேறி இரு வாரங்கள் கழித்து மக்களுக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் தாமரையையும் ராஜூவை காட்டமாக பேசியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த விடியோவை நீங்களும் பாருங்கள்! Watch The Video Below!…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in