இந்த காரணத்தினால் தான் கணவரை விட்டு பிரிந்தேன்…முதல் முறையாக உண்மையை போட்டுடைத்த இசைவாணி

ஆண்கள் மட்டும் தான் கானா பாட வேண்டுமா ஏன் பெண்கள் பாடக்கூடாதா பெண்களாலும் முடியும் என கானா பாடகியாக உருவெடுத்தவர் இசைவாணி. கானா பாடல்களில் சிறந்து விளங்குபவர் இவர். பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும் தனது குழுவுடன் கானா பாடி அசத்தியவர் இவர்.இவர் பாடும் கானா பாடல்களுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ஒவ்வொருவருக்கும் ஒன்றின் மேல் காதல் உண்டு இவருக்கு கானா மேல் தான் அதிக காதல்.கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சிங்கிங் ஸ்டார்ஸ் என்ற இசை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று அசத்தினார்.

இந்த காரணத்தினால் தான் கணவரை விட்டு பிரிந்தேன்...முதல் முறையாக உண்மையை போட்டுடைத்த இசைவாணி 1

விளம்பரம்

மேலும் சினிமாவிலும் தற்போது சில கானா பாடல்களை பாடி வருகிறார் இசைவாணி.பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார்.நீண்ட நாட்கள் உள்ளே இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 49 வது நாளே குறைவாக வாக்கு வித்தியாசத்தில் வீட்டை விட்டு வெளியேறினார்.இது இவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.இந்த நிகழ்ச்சியில் இவர் தனது குடும்பத்தினை பற்றி கூறும் பொழுது அவர் தனக்கு கல்யாணம் நடந்ததை பற்றி கூறவில்லை.இந்நிலையில் இவரது திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி இசைவாணி மீது பெரும் சர்ச்சை கிளம்பியது.

இந்த காரணத்தினால் தான் கணவரை விட்டு பிரிந்தேன்...முதல் முறையாக உண்மையை போட்டுடைத்த இசைவாணி 2

விளம்பரம்

கல்யாணம் ஆன உண்மையை மறைத்துவிட்டார் என இவரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர்.வீட்டை விட்டு வெளியே வந்த அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் கணவரை விட்டு பிரிந்துவிட்டேன் அதனால் தான் அதனை பற்றி நான் பேசவில்லை என தெரிவித்திருந்தார்.தற்போது அதற்கான காரணத்தினை தெரிவித்துள்ளார் இசைவாணி,அதன்படி அவர், எனக்கு கானா பாடல் மீது அதிக ஆர்வம் அதற்கு அப்பா அம்மா வீட்டில் ஆதரவு இருந்தது,ஆனால் கணவர் வீட்டில் அந்த ஆதரவு இல்லை என்பதால் கணவரை பிரிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment