The Indian Times

உங்க புரட்சி புடலங்காய்க்கு எங்க வீட்டு பொண்ணுங்களா கிடைச்சது…….RK SURESH மிரட்டும் காடுவெட்டி Teaser

பாலா இயக்கத்தில் வெளியாகிய தாரை தப்பட்டை என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் ஆர்.கே.சுரேஷ்.இப்படத்தில் வில்லன் ஆக நடித்து மிரட்டியிருப்பார்.இவரது வில்லத்தனம் பார்க்கும் நம்மளையே பயமுறுத்தும் அளவிற்கு இருக்கும்.இதை கண்டு இயக்குனர் முத்தையா தனது மருது படத்தில் இவருக்கு மீண்டும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தினை அளித்தார்.இதில் நடிகர் விஷாலுக்கு வில்லன் ஆக நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார்.இந்த ரோலேக்ஸ் பாண்டியன் கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

தற்போது இவர் புதியதாக படங்களை தயாரித்து வருகிறார்.வில்லன் ஆக மட்டும் நடித்து வந்த இவர் தற்போது கதாநாயகனாக சினிமாவிற்குள் களம் இறங்கி அனைவரையும் ஆச்சரியப்படவைத்தார்.கதாநாயகன் வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களையும் மிக சிறப்பாக செய்து வருகிறார். அண்மையில் இயக்குனர் பத்மகுமார் இயக்கத்தில் விசித்திரன் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் கடந்த மே 6ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றிருந்தது.அதனை தொடர்ந்து இவர் அடுத்ததாக நாயகனாக நடிக்கும் காடுவெட்டி படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

இயக்குனர் சோலை ஆறுமுகம் எழுத்து இயக்கத்தில் ஆர் கே சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் காடுவெட்டி.இப்படத்தின் டீசரில் வெறித்தனமாக வேட்டையாடி உள்ளார் சுரேஷ்.அதிலும் உங்க புரட்சி புடலங்காய்க்கு எங்க வீட்டு பொண்ணுங்களா கிடைச்சது என்ற வெறித்தனமான வசனங்கள் அனல் பறக்க செய்கிறது.தற்போது இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.ரசிகர்கள் ஆர்.கே.சுரேஷ்க்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits: divo music

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

1 Comment

J.viknesh — 5/6/2022

மனிதன் தன்னை நினைப்பதைவிட ஒருவரை சார்ந்துதான் வாழ்கின்றான் …
சினிமாக்கள் ஒரு காலத்தில் பொழுது போக்கிற்காக மட்டும் தான் அது பயன்படுத்தப்பட்டது ஆனால் சமூக ரீதியாக படங்கள் வருவதை இந்த காலகட்டங்கள் இவ்வாறு மாற்றப்பட்டது என்பது சாதி வெறியர்கள் மட்டும் தான் காரணம் என நினைக்கிறேன்…

புரட்சி புடலங்காய்க்கு என் வீட்டுப் பெண்கள் தான் கிடைத்ததா என்ற வசனம் …

நோக்கம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ளுதல் அவசியம் …

தமிழனுக்கு சாதி மதங்களே கிடையாது …

அவ்வாறு இருக்கையில் எப்படி வந்தது தமிழனுக்கு சாதிகளும் மதங்களும் ..

கைபர் கணவாய் வழியாக பிழைக்க வந்த ஆரிய இனம் தான் ..
தமிழனைப் பிரிப்பதற்காக வர்ணாசிரம கொள்கையை எழுதினார்கள் …

தமிழன் ஆரியனுக்கு கைக்கூலி ஆகவும் பகடைக்காயாக மாறிய பிறகுதான் இந்த ஆண்ட பரம்பறை உருவானதே தவிர ..
,அதற்கு முந்தைய காலத்தில் நாம் காட்டில்தான் வாழ்ந்தோம் காடு குகை பகுதிகள் இப்படி தான் வாழ்ந்தார்கள் மன்னர்களாக சிறந்த வீரர்களை மட்டும்தான் தேர்ந்தெடுத்தார்கள் .
அங்கு வாரிசு வழியாக ஆட்சி முறை இல்லை …

ஆரியன் தன் கட்டுப்பாட்டுக்குள் மன்னர்களை உருவாக்கிய பிறகு இந்த ஆண்ட பரம்பரை உருவானது …

அதற்கு முன்பாக சிவன் என்னும் சிவ நாடு ..இந்தியா முழுவதும் தமிழர்களாகவே வாழ்ந்தார்கள் தமிழ் மன்னர்கள் ஆகவே வாழ்ந்தார்கள் ..

ஆதலால் ஆண்ட பரம்பரையினர் தமிழ் மக்களே கூறவேண்டும் ..

ஒரு நாள் எனது கட்டுப்பாட்டிற்குள் இந்த அரசியல் சட்டம் வரும் ..

அன்று எந்த சாதியும் இருக்காது மதமும் இருக்காது சிவாயநம என்ற முழக்கம் மட்டும் இருக்கும் …

வேதம் புராணம் இதிகாசம் இவை அனைத்தும் தமிழன் எழுதியதா …

ஆரியனை தூக்கி வைத்து கொண்டாடும் சாதி வெறியர்களுக்கு நான் ஒரு பாடமாக இருப்பேன் தமிழனை பிரிப்பதற்காக ஆரியன் வலையில் விழுந்து விட்டார் பதவி வெறியர்கள் …
இவர்களால் சமூகத்தில் சம நிலை எவ்வாறு உருவாகும்…சாதி வெறியர்கள்தான் உருவாவார்கள்…

சிவநாடு மக்கள் கட்சி