The Indian Times

ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் இரண்டு பியானோவை ஒரே நேரத்தில் இசைத்த லிடியன்….மெய்மறந்து ரசித்த வெளிநாட்டவர்

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது இந்தியாவில் முதல் முறையாக அதுவும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது .இதுவரை 43 செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றுள்ளது.இந்த போட்டிகள் எதுவும் இந்தியாவில் நடத்தப்படவில்லை. இந்நிலையில் முதல்முறையாக சென்னை மாமல்லபுரத்தில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் தனது பியானோ இசையில் மயக்கியவர் தான் லிடியன்.சிறுவயதில் இருந்தே இசைக்கருவிகள் மேல் அதிக ஆர்வம் உள்ளவர் இவர்.இதனால் பியானோவை சிறுவயதில் இருந்தே வாசித்து பல சாதனைகளையும் படைத்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நேற்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் இரண்டு பியானோவை வாசித்து அசத்தினார்.இதனை கண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அசந்துள்ளார்.மேலும் வெளிநாட்டவர் ஒருவர் கைகளை ஆட்டி லிடியன் இசையை கேட்டு மகிழ்ந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் வெளிநாட்டவரையே அசர வைத்தவன் தமிழன் என லிடியனை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Advertisement

இவ்வாறு நிகழ்ச்சியில் லிடியன் இசையை ரசித்து கேட்டவர் யார் என்று விசாரித்தபொழுது அவர் சர்வதேச செஸ் கூட்டமைப்பான பிடே (International Chess Federation -FIDE) அமைப்பின் துணை தலைவர் கேன் வில்கின்சன் என்பது தெரியவந்துள்ளது.இதுகுறித்து அவரிடம் கேட்ட பொழுது அவர் கூறியதாவது,இந்த நாள் சிறப்பாக அமைந்துள்ளது,பியானோ நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது,சிறிய வயதில் நான் பியானோ வசித்துள்ளேன் பின்னர் பின்னர் செஸ் ஆட ஆரம்பித்ததால் கவனம் செலுத்த முடியவில்லை அதனால் பியானோ நிகழ்ச்சியை நெகிழ்ந்து ரசித்துள்ளதாக கூறினார்

Embed video credits : BBC news tamil

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in