The Indian Times

RED CARD கொடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் பிரதீப்

தமிழில் 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 7வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி அக்டொபர்1 ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது.100 நாட்கள் 20க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டிபோட்டு இறுதியில் வெல்பவருக்கு 50 லட்சம் பணமும் பிக் பாஸ் டைட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் இந்த முறை 18 போட்டியாளர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் அங்குள்ள நடிகர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கூல் சுரேஷ்,வினுஷா தேவி, ரவீனா தாஹா,பிரதீப் அந்தோணி, நிக்சன்,பூர்ணிமா,விஜய் வர்மா,ஐஸ்வர்யா,அனன்யா ராவ் , மணி சந்திரா ,விஷ்ணு விஜய் . பவா செல்லத்துரை, மாயா, பாண்டியன் ஸ்டார் சரவணன் விக்ரம்,ஜோவிகா,விசித்ரா, யுகேந்திரன்,என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Advertisement

தற்போது பெண் போட்டியாளர்கள் மற்றும் ஆண் போட்டியாளர்கள் அனைவரும் பிரதீப் மீது புகார் கொடுத்துள்ளனர்.இதனை விசாரித்த கமல்ஹாசன் பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in