The Indian Times

வந்துட்டியா என் செல்லமே.. ஷிவினை கட்டியணைத்து வரவேற்ற ரட்சிதா

நடிப்பின் மீது ஆர்வம் உள்ள ரட்சிதா வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடி வந்த நிலையில் இறுதியாக சின்னத்திரையில் தான் வாய்ப்பு கிடைத்தது.சரி கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திவிடுவோம் என விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியவர் நடிகை ரக்ஷிதா.அதன்பின் இவர் பல நாடகங்களில் நடித்தார் .பல நாடகங்கள் நடித்தும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு எந்த நாடகத்திலும் கிடைக்கவில்லை தொடர்ந்து போராடிய ரட்சிதாவிற்கு இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி தொடரில் வாய்ப்பு கிடைத்தது.இந்த தொடரில் மீனாட்சியாக நடித்து அசத்தி இருந்தார்.இந்த தொடரில் இவருக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நாடகத்தின் மூலம் இவர் தமிழக மக்களின் அனைவரது வீட்டிலும் சென்றடைந்து மிக பிரபலமாகினார்.தற்போது விஜய் தொலைக்காட்சியை தொடர்ந்து ஜீ தொலைக்காட்சி,கலர்ஸ் டிவி என பல சேனல்களிலும் நாடகங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் சொல்ல மறந்த கதை எனும் சீரியலில் நடித்து வருகிறார்.இந்த சீரியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ செய்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ரக்ஷிதா.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

இந்நிலையில் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் வாய்ப்பு கிடைத்தது.யோசிக்காமல் உடனே கலந்துகொண்டார்,மேலும் பிற போட்டியாளர்களுடன் தன்னால் முயன்ற அளவுக்கு போட்டியிட்டு அசத்தினார்.தனது விளையாட்டின் மூலம் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.வீட்டில் இருந்து 13வது போட்டியாளராக ரட்சிதா வெளியேறியுள்ளார்.இவருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷிவினுக்கும் இடையே பயங்கர நட்பு உருவாகியுள்ளது,இதனை நிகழ்ச்சியில் அழுதுகொண்டு ஒருமுறை ஷிவின் கூறினார்.தற்போது ஷிவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அவரை ரட்சிதா வரவேற்றுள்ளார். அப்பொழுது எடுத்த புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.எப்போவும் போல இப்படியே நண்பர்களாக ஒன்றாக இருக்க வேண்டும் என இவர்களை வாழ்த்தி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in