The Indian Times

இதெல்லாம் ஒரு கதைன்னு எப்படி படம் எடுத்தாங்கன்னு புரியல… அகிலன் படத்தின் BLUESATTAI மாறன் REVIEW

ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் ஆக மாறியுள்ளார் ஜெயம் ரவி .முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.வாய்ப்பு பலராலும் ஏற்படுத்தி தர முடியும் ஆனால் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.மிருதன்,டிக் டிக் டிக் போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் நல்ல படங்களை கொடுத்து மக்களை வெகுவாக கவர்ந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இவருக்கு அடுத்ததாக பூலோகம் எனும் படத்தினை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் என்பவர் இயக்கிய அகிலன் இன்று வெளியாகி உள்ளது.இதில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்..ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது.அதன்படி ரசிகர்கள் இன்று ஆவலாக இப்படத்தினை கண்டு களித்து வருகின்றனர். தற்போது அகிலன் படத்தினை ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisement

இந்த விமர்சனத்தில் இவர் கூறியதாவது,படத்துல கண்டெயினரை தொறக்குறாங்க மூடுறாங்க வேறே ஒன்னும் பண்ணமாட்டுக்காங்க,படத்துல யாரு வில்லன்னே தெரியலை.படத்துல ஹீரோயின் என் வருதுன்னே தெரியலை.காமெடிக்கு எந்த சீனும் இல்லை.இதெல்லாம் ஒரு கதைன்னு சொல்லி எப்படி ஓகே சொன்னாங்கன்னு தெரியலை என கழுவி ஊத்தி விமர்சனம் செய்துள்ளார்.

Embed video credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in