The Indian Times

நீ இன்னும் பிக்காளி மாதிரிதான்டி இருக்கே… வெண்பாவை பளார் என அறைந்த கண்ணம்மா… பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம்.முதல் சீசன் முடிந்தது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த தொடரின் இரண்டாவது பாகத்தினை எடுத்து ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த பாரதி கண்ணம்மா சீசன் 2 வில் பாரதியாக ரோஜா சீரியலில் நடித்து பிரபலமாகிய சிப்பு நடிக்க உள்ளார்.கண்ணம்மாவாக கண்ணம்மாவே நடித்து வருகிறார்.போன சீசனில் இருந்த கண்ணம்மா இந்த சீசனில் சித்ராவாக சிறையில் இருக்கிறார்,சிறையில் இருந்து வெளியே வரவே வரும் வழியில் கண்ணம்மாவுடன் தோழியாகிறார் சித்ரா, ஆனால் சிலர் கண்ணம்மாவை கொ லை செய்துவிடவே கண்ணம்மா கேட்டுக்கொண்டதற்கு இணங்க சித்ரா கண்ணம்மாவாக மாறி அவர் வீட்டுக்கு செல்கிறார்.

முதல் சீசன் வெற்றிபெற முக்கிய காரணமே வெண்பா கதாபாத்திரம் தான் தற்போது அதே கதாபாத்திரத்தை மீண்டும் பாரதி கண்ணம்மா 2வில் கொண்டு வந்துள்ளனர்.மிரட்டலாக வெண்பா மீண்டும் வந்து தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி ப்ரோமோவில் கண்ணம்மாவின் தோழியை வெண்பா அடிக்கவே இதை கேட்ட கண்ணம்மா கடுப்பாகி வெண்பா செல்லும் வழியை மறித்து வாடி போடி என வெண்பாவை திட்டி செவுட்டில் பளார் என அறை வைத்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in