The Indian Times

சட்டியோ, பானையோ உள்ள மணிமேகலை பேரு மட்டும் வைக்காதீங்க.. செம்மயாக கலாய்த்த மனோபாலா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோதான் குக் வித் கோமாளி. இது தற்போது இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும், புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், ஷீத்தல், அருண், மூக்குத்தி முருகன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். புதிய குக்குகளாக கிரேஸ் கருணாஸ், மனோ பாலா, ரோஷினி, வித்யூலேகா, சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொடர்ந்து கொண்டு உள்ளார்கள். Youtube video code embed credits: Vijay Televison

Advertisement

ரியாலிட்டி ஷோ என்றாலே காமெடி, கலாட்டா, அலப்பறைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி பற்றி சொல்லவே வேண்டாம். உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்கள் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு குக்குகள் உடன் சேர்ந்து கோமாளிகள் அடிக்கும் லூட்டிகள் வேறு லெவெலில் இருக்கும். காமெடி கலாட்டா, நட்பு, காதல் என்று எல்லா வகையான கன்டென்ட்-உம் கிடைக்கிற ஒரு இடமாக அந்த நிகழ்ச்சி இருக்க்கும் காரணத்தினால்தான் அந்த நிகழ்ச்சி இவ்வளவு வெற்றி அடைந்து இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. Youtube Video Code Embed Credits: Vijay Television

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் இந்த வாரம் இடைஞ்சலாக களிமண்ணில் சிறு சிறு பொம்மைகள் செய்ய சொல்கின்றார் செஃப் வெங்கடேஷ் பட். அதற்கு சந்தோஷ் பிரதாப் என்ன மணிமேகலை மூளை வெளியே இருக்கிறது என்று செம்ம கலாய் கலாய்க்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in